பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
கேளடி கண்மணி, ஆசை, நேருக்கு நேர், ரிதம் உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கிய வசந்த், சென்னையில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில்...
‛‛நான், 40 ஆண்டுகளாக, புத்தக கண்காட்சிக்கு வருகிறேன். சிறு வயதில், ரமணியின், நால்வர் நூலகத்தில் புத்தகம் விற்றிருக்கிறேன். என் அம்மாவுக்காக, நந்தனம் கிளை நூலகம் சென்று, ஜெயகாந்தன் புத்தகங்களை தேடி கொண்டு வந்திருக்கிறேன். துணிவே துணை என, எழுதிய தமிழ்வாணன், தன்னம்பிக்கை கட்டுரைகளை தமிழில் தந்த, கண்ணதாசன் பதிப்பகம், எழுத்தாளர் அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, வண்ணதாசன், வண்ணநிலவன் என பலரும், அங்கு தான் எனக்கு அறிமுகமாகினர்.
எங்கு சென்றாலும், வேலை முடிந்ததும், வீட்டிற்கு ஓடி விடுவேன். விட்ட இடத்தில் இருந்து, புத்தகங்களை படிக்க வேண்டும் என்ற ஆவல் தான், அதற்கு காரணம். நான் உயிருடன் இருக்க, பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், என்னை உயிர்ப்புடன் வைத்திருப்பவை புத்தகங்கள் தான். எழுத்தாளன், அடுத்த சந்ததிக்காக சிந்திப்பவன்; அவனை கொண்டாடும் சமூகம் தான் உருப்படும்.
சென்னை புத்தக கண்காட்சியில், எழுத்தாளர், வாசகர் சந்திப்பு, கலை நிகழ்ச்சிகளை அதிகம் நடத்த வேண்டும். புத்தகம் தேடும் இடமாக மட்டுமல்லாமல், வாசகன் நுகரும் அனுபவ சாலையாக, இது மாற வேண்டும்.
இவ்வாறு இயக்குநர் வசந்த் எஸ்.சாய் கூறியுள்ளார்.