பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
உலக நாயகன் கமல்ஹாசனும், இயக்குனர் ஆர்.சி.சக்தியும் பரமக்குடியை சேர்ந்தவர்கள். அன்னை வேளாங்கன்னி படத்தில் ஆர்.சி.சக்தி உதவி இயக்குனராக இருந்தபோது, அந்த படத்தின் டான்ஸ் மாஸ்டர் தங்கப்பனின் உதவியாளராக இருந்தவர் கமல். அன்று முதல் இருவருக்கும் நல்ல நட்பு இருந்தது, இருவரும் ஒன்றாகவே சுற்றுவார்கள். "நான் இயக்குனராகி படம் இயக்கினால் அதில் நீ தான் ஹீரோ" என்று கூறியிருந்தார் ஆர்.சி.சக்தி.
சொன்னபடியே அவர் இயக்கிய முதல் படமான உணர்ச்சிகள் படத்தில் கமலை ஹீரோவாக நடிக்க வைத்தார். சிறிய பட்ஜெட் படம். சென்னையில் உள்ள கமல் வீட்டிலேயே படப்பிடிப்பு நடந்தது. 4 ஆயிரம் அடி படம் எடுத்த நிலையில் மேற்கொண்டு படம் எடுக்க பணம் இல்லை. அதனால் எடுத்த 4 ஆயிரம் அடியை எடிட் செய்து விநியோகஸ்தர்களுக்கு போட்டு காட்டினார் ஆர்.சி.சக்தி.
"கதை சூப்பாரா இருக்கு. உங்க மேக்கிங்கும் சூப்பரா இருக்கு. ஆனால் ஹீரோவா நடிச்சிருக்கிற பையன் சரியில்லை. அவனை மாற்றிவிட்டு வேறு ஹீரோவை போட்டால் இப்போதே அட்வான்ஸ் தருகிறோம்" என்று விநியோகஸ்தர்கள் கூறினார்கள். "என் படத்தில் கமல்தான் ஹீரோ, என் படத்தை யாரும் வாங்காவிட்டாலும் பரவாயில்லை, பிச்சை எடுத்தாவது படத்தை முடிப்பேன்" என்றார் ஆர்.சி.சக்தி. அதன்பிறகு ஒரு வழியாக படத்தை முடித்தார்.
இந்த நட்பின் அடையாளமாக பின்னாளில் கமலின் தாயார் மறைந்தபோது தன் சார்பாக ஆர்.சி.சக்தியை இறுதி சடங்கு நிறைவேற்ற வைத்தார் கமல். அன்று கமலை படத்தை விட்டு நீக்கச்சொன்ன விநியோகஸ்தர்கள். பிற்காலத்தில் கமலின் படத்தை வாங்க தவம் கிடந்தது தனிக்கதை.