தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சல்மான்கானும் சர்ச்சையும் பிரிக்கமுடியாத விஷயம். 19 வருடங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் உள்ள கன்கானி கிராமத்திற்கு படப்பிடிப்புக்கு சென்றவர், துப்பாக்கி எடுத்துக் கொண்டு காட்டுக்குள் வேட்டையாட சென்றார். அப்போது இரண்டு மான்களை சுட்டு அதனை எடுத்து வந்தார். அவர் சுட்டது உலக வனயியல் கோட்பாட்டின்படி அரிய வகை மான் இனம். இதனால் வன இலாகாவினர் சல்மான்கான் மீது வழக்கு தொடர்ந்தனர்.
ஜோத்பூர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கு 19 ஆண்டுகளாக நடந்து வந்தது. தற்போது இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் மீதான தீர்ப்பை வருகிற 18ந் தேதி வழங்குவதாக தெரிவித்தார். அதோடு தீர்ப்பு வழங்கப்படும் அன்று சல்மான்கான் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
இந்த வழக்கில் சல்மான்கான் குற்றவாளி என்று நீதிபதி தீர்ப்பளித்தால் அவருக்கு சிறை தண்டனை வழங்க வாய்ப்பிருக்கிறது. இந்த தீர்ப்பினை சல்மானை வைத்து படம் எடுத்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர்கள் வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.