ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சல்மான்கானும் சர்ச்சையும் பிரிக்கமுடியாத விஷயம். 19 வருடங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் உள்ள கன்கானி கிராமத்திற்கு படப்பிடிப்புக்கு சென்றவர், துப்பாக்கி எடுத்துக் கொண்டு காட்டுக்குள் வேட்டையாட சென்றார். அப்போது இரண்டு மான்களை சுட்டு அதனை எடுத்து வந்தார். அவர் சுட்டது உலக வனயியல் கோட்பாட்டின்படி அரிய வகை மான் இனம். இதனால் வன இலாகாவினர் சல்மான்கான் மீது வழக்கு தொடர்ந்தனர்.
ஜோத்பூர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கு 19 ஆண்டுகளாக நடந்து வந்தது. தற்போது இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் மீதான தீர்ப்பை வருகிற 18ந் தேதி வழங்குவதாக தெரிவித்தார். அதோடு தீர்ப்பு வழங்கப்படும் அன்று சல்மான்கான் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
இந்த வழக்கில் சல்மான்கான் குற்றவாளி என்று நீதிபதி தீர்ப்பளித்தால் அவருக்கு சிறை தண்டனை வழங்க வாய்ப்பிருக்கிறது. இந்த தீர்ப்பினை சல்மானை வைத்து படம் எடுத்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர்கள் வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.