தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மிஷ்கின் இயக்கிய சித்திரம் பேசுதடி படத்தில் இடம்பெற்ற வாளமீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் -என்ற பாடலை பின்னணி பாடியதோடு திரையிலும் தோன்றி நடித்தவர் கானா உலகநாதன். அந்த ஒரே பாடலில் பிரபலமான அவர் மீண்டும் வாளமீன் பாடல் போன்று முற்றிலும் ஆண்கள் மட்டுமே நடிக்கும் ஆடவர் -என்ற படத்திற்காக இன்னொரு பாடலை பாடியிருக்கிறார். சென்னை மாநகரின் பெருமைகள் பற்றி சொல்லும், சென்னை பட்டினம் அழகாய் இருக்கு -என்ற அந்த பாடலிலும் தானே நடித்திருப்பதாகவும் சொல்கிறார் கானா உலகநாதன்.
மேலும், இதுவரை பாடல் பாடியபடி மட்டுமே திரையில் தோன்றிய அவர், தற்போது ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் -என்ற படத்தில் வடசென்னை காமெடி தாதா வேடத்தில் நடித்திருக்கிறார். வேஷ்டி -டீசர்ட் கெட்டப்பில் புதுமையான ஹேர்ஸ்டைலுடன் இந்த படத்தில் நடித்துள்ள அவர், தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிக்கப்போகிறாராம். அதனால் தன்னை பின்னணி பாட அழைக்கும் டைரக்டர்களிடம், தான் நடிக்க ஆர்வமாக இருப்பதையும் சொல்லி சான்ஸ் கேட்டு வருவதாகவும் சொல்கிறார் கானா உலக நாதன்.