அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
மலையாள குணச்சித்திர நடிகர் மணியம்பிள்ள ராஜூ, வெறுமனே நடிகர் என்பதோடு மட்டுமல்லாமல் தயாரிப்பாளராக மாறி அவ்வப்போது ஒருசில படங்களையும் தயாரித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் பிருத்விராஜ் நடிப்பில் வெளியாகி நூறு நாள் கொண்டாடிய 'பாவாட' படத்தை தயாரித்தவரும் இவர்தான். மோகன்லாலின் மிக நெருங்கிய நண்பரான இவர், ஆரம்ப காலங்களில் இருந்து மோகன்லாலின் படங்களில் தவறாது இடம்பெற்று வந்தார். அதுமட்டுமல்ல இயக்குனர் பிரியதர்ஷன் படங்களில் டைட்டிலை எழுதியதும் அடுத்து இவர் பெயரை எழுதும் அளவுக்கு ஆஸ்தான நடிகராகவும் விளங்கினார்.
அதனால் இப்போது பிரியதர்ஷனும் மோகன்லாலும் இணைந்து மணியம்பிள்ள ராஜுவின் தயாரிப்பு நிறுவனத்தில் ஒரு படம் பண்ணித்தருவதாக வாக்கு கொடுத்துள்ளார்களாம். படத்தின் பட்ஜெட் கிட்டத்தட்ட 30 கோடி என்று சொல்லப்படுகிறது. இதில் ஒரு பியூட்டி என்னவென்றால், இவர் 'பாவாட' படத்தை தொடர்ந்து பிரதாப் போத்தன் டைரக்சனில் துல்கர் சல்மான் நடிக்கும் படத்தை தயாரிக்க திட்டமிட்டிருந்தார்..
அந்தப்படத்தை 9 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தான் எடுக்க திட்டமிட்டிருந்தார் பிரதாப் போத்தன். முதலில் துல்கர் படம் என்பதால் ஒகே சொன்னாலும், பின்னர் பட்ஜெட்டை காரணம் காட்டி தன்னால் அவ்வளவு செலவழிக்க முடியாது என்று கூறி அதிலிருந்து விலகினார் மணியம்பிள்ள ராஜூ. ஆனால் அதே நபர்தான் தற்போது மோகன்லால் படத்துக்காக 30 கோடி பட்ஜெட்டில் படம் எடுக்க முன்வந்துள்ளார் என்றால் எல்லாம் 'புலி முருகன்' கொடுத்துள்ள தைரியம் தான் என்கிறார்கள்.