டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
அனுபவமில்லாமல் பணத்துடன் படத்துறைக்கு வரும் பலரும் கடைசியில் நஷ்டத்தையே சந்திக்கின்றனர். சினிமா உலகின் நெளிவுசுளிவுகள் தெரியாததினால் இப்படி வருபவர்கள் சிக்கலில் மாட்டிக்கொள்கின்றனர். 650 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலைக் குவித்து, இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த படம் ராஜமௌலி இயக்கிய 'பாகுபலி'. இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. சில தினங்களுக்கு முன்தான் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றது.
பாகுபலி-2 படத்தின் தமிழ் பதிப்பின் தமிழ்நாடு மற்றும் வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை 'கே.புரொடக்ஷன்ஸ்' என்ற நிறுவனம் வாங்கியுள்ளது. இதே நிறுவனம் கமல்ஹாசன் நடித்த 'விஸ்வரூபம்-2' படத்தின் தமிழக விநியோக உரிமையையும் வாங்கியிருந்தது. 'விஸ்வரூபம்-2' படம் எப்போது வெளியாகும் என்றே தெரியாதநிலையில் கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் முதலீடு முடங்கிப்போனது.
இந்த படத்தை அடுத்து தனுஷ் நடிப்பில், கௌதம் மேனன் இயக்கி வரும், 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் விநியோக உரிமையையும் கே.புரொடக்ஷன்ஸ் வாங்கியுள்ளது. தனுஷ் - கௌதம் மேனன் இடையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக எனை நோக்கி பாயும் தோட்டா பட பணிகள் முடங்கிக் கிடக்கின்றன.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வரும் இந்த படங்களை வெளியிடுவதன் மூலம் தமிழ் சினிமாவில், கவனிக்கத்தக்க நிறுவனமாக வளர நினைத்தது கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனம். ஆனால் வாங்கிய இரண்டு படங்களும் பிரச்சனையில் சிக்கியிருப்பதால் கவலையில் ஆழ்ந்துள்ளது கே.புரடக்ஷன்ஸ்.