'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
நடிகர் திலகம் சிவாஜியின் சிலை சென்னை கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை அருகே வைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் சிம்சன் மணிக்கூண்டு மற்றும் அசோக சக்கர தூண் இருக்கிறது. என்றாலும் சிவாஜி சிலை மட்டும் போக்குவரத்துக்கு இடையூறு இருப்பதாக பொதுநல வழக்கு தொடரப்பட்டது. தமிழக அரசும் சிவாஜி சிலை போக்கவரத்துக்கு இடையூறாக இருப்பது உண்மைதான் என்று மனுதாக்கல் செய்தது. இதனால் சிலையை அகற்ற நீமன்றம் கெடு விதித்தது. அப்போது தமிழக அரசு "சிவாஜிக்கு மணி மண்டபம் கட்டுகிறோம். அதில் இந்த சிலையை நிறுவிக் கொள்கிறோம்" என்று தெரிவித்தது.
ஆனால் சிவாஜி சிலை அந்த இடத்திலேயே இருக்க வேண்டும். அல்லது கடற்கரை பகுதியில் ஏதாவது ஒரு இடத்தில் வைக்கப்பட வேண்டும் என்ற பொதுவாக கருத்து நிலவுகிறது. இந்த நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கமும் இதனை வலியுறுத்தியுள்ளது. நேற்று நடந்த நடிகர் சங்கத்தின் செயற்குழுவில் இதுகுறித்து விவாதித்து முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி சிவாஜி சிலையை கடற்கரை பகுதியில் இருந்து அகற்றாமல் அங்கேயே வேறு இடத்தில் நிறுவபப்பட வேண்டும். அல்லது கோயம்பேடு சந்திப்பு, கத்திப்பாரா சந்திப்பு போன்ற மக்கள் கூடும் இடத்தில் வைக்க வேண்டும். இது தொடர்பாக அரசிடம் வேண்டுகோள் வைக்க முடிவு செய்யப்பட்டது. இதுதவிர நடிகர் சங்க கட்டிடம் கட்டுவது, பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
செயற்குழுவிற்கு தலைவர் நாசர் தலைமை தாங்கினார். பொருளார் கார்த்தி, துணை தலைவர் பொன்வண்ணன் முன்னிலை வகித்தனர். ராஜேஷ், பிரசன்னா, கோவை சரளா, மனோபாலா, நந்தா, உதயா, சோனியா உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.