ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இருமுகன் படத்தில் நடித்து வந்தபோது, அந்த படத்தை முடித்ததும் ஹரியின் சாமி-2வில் விக்ரம் நடிப்பார் என்றுதான் கூறப்பட்டது. ஆனால், விக்ரம் நடிக்க யிருந்த கரிகாழன் படம் சில நாட்கள் படப்பிடிப்போடு கைவிடப்பட்ட நிலையில், அந்த படத்திற்காக விக்ரம் அட்வான்ஸ் வாங்கியிருந்ததால் அந்த பட நிறு வனத்துக்கு ஒரு படம் விக்ரம் நடித்துக்கொடுத்தாக வேண்டிய அக்ரிமென்ட் சைனாகி இருந்தது. அதனால் வாலு பட டைரக்டர் விஜயசந்தர் இயக்கும் படத்தில் நடித்தாக வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார் விக்ரம்.
இருப்பினும், கெளதம்மேனன் சொன்ன துருவநட்சத்திரம் கதை பிடித்து விட்டதால் அவர் படத்தில் நடிக்கவும் கால்சீட் கொடுத்தார். கமலை வைத்து கெளதம்மேனன் இயக்கிய வேட்டையாடு விளையாடு படம் பாணியில் வெளிநாடுகளிலேயே இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு நடக்கிறது. குறிப்பாக, அமெரிக்காவில் மட்டும் 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்துகிறார் கெளதம்மேனன். இந்த படத்தில் விக்ரம், ஜான் என்ற கேரக்டரில் இன்டர்நேசனல் ஸ்பை அதிகாரியாக நடிக்கிறார். இப்படத்தை 2017 ஆகஸ்டில் வெளியிட திட்டமிட்டுள்ளார் கெளதம்மேனன். ஆனால், விஜயசந்தர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தை அதற்கு முன்பே வெளியிட திட்டமிட்டுள்ளனர்.