ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கடந்த இருபது நாட்களாக கேரள தியேட்டர்களில் புதிய படம் எதுவும் ரிலீஸ் ஆகாததன் பின்னணியில் முக்கிய சூத்திரதாரியாக இருப்பவர் கேரள பிலிம் எக்சிபிடர்ஸ் சங்க தலைவரான லிபர்ட்டி பஷீர்.. இதுவரை 40 சதவீதமாக இருந்துவரும் தங்களது பங்குத்தொகையை 50 சதவீதமாக உயர்த்திக்கேட்டு, தியேட்டர் அதிபர்களை ஒன்று சேர்த்து போராட்டத்தில் இறங்கியவர் இவர்தான்.. பல தியேட்டர் அதிபர்களுக்கும் இவரது அடாவடியில் உடன்பாடு இல்லாவிட்டாலும் சங்கத்தில் இருக்கும் காரணத்தால் வேறு வழியின்றி இவரது செயலுக்கு துணை நின்றனர்..
இந்தப்பிரச்சனையில் கேரள அமைச்சர் ஏ.கே.பாலன் தலையிட்டும் பிரச்சனை தீராத நிலையில் நேற்று முன் தினம் கேரள முதல்வர் பிணராயி விஜயன், தயாரிப்பாளர்கள் - திரையரங்க உரிமையாளர்கள் என இருதரப்பையும் அழைத்து பேசி தற்போதையை நடைமுறையே தொடரும் விதமாக சமரசம் செய்துவைத்தார். தியேட்டர் அதிபர்களின் கோரிக்கையை விசாரணை கமிஷன் அமைத்து பரிசீலிப்பதாகவும் கூறியுள்ளார்.. இந்தநிலையில் இந்த பேச்சு வார்த்தை முடிந்த சில மணி நேரங்களிலேயே கேரளாவில் உள்ள பல தியேட்டர்களில் வருமான வரியினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்..
இதில் பல தியேட்டர்களில் முறையான ஆவணங்கள் இல்லாததும் வரி ஏய்ப்பு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.. குறிப்பாக இந்தப்பிரச்சனைக்கு மூலகாரணமாக இருந்த லிபர்ட்டி பஷீருக்கு சொந்தமான லிபர்ட்டி தியேட்டர் காம்ப்ளெக்சில் உள்ள நான்கு தியேட்டர்களிலும் டிக்கெட்டுகள் கூடுதல் கட்டணத்தில் விற்கப்பட்டதும், கேளிக்கை வரி கட்டாமல் வரி ஏய்ப்பு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. மலையாள சினிமா துறையை தனது தனிப்பட்ட சுயநல நோக்கத்திற்காக ஸ்தம்பிக்க வைத்ததற்காகவே இப்போது லிபர்ட்டி பஷீர் உள்ளிட்டவர்கள் மீது அரசு தனது நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளது என திரையுலக வட்டாரத்தில் சந்தோஷத்துடன் பேசிக்கொள்கிறார்களாம்..
லிபர்ட்டி பஷீருக்கு துணைநின்ற காரணத்துக்காக நம்முடைய தியேட்டர்களிலும் ரெய்டு வரும் அளவுக்கு நடந்துகொண்டு விட்டோமே என பல தியேட்டர் அதிபர்கள் புலம்புகிறார்களாம். இதனால் விரைவில் புதிய படங்களை இந்த வாரத்தில் இருந்தே ரிலீஸ் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள் என்றே தெரிகிறது.