விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா தனுஷ். இவர் தனது 34 வருட வாழ்க்கையை சுயசரிதையாக எழுதியுள்ளார். ஸ்டேண்டிங் ஆன் ஆப்பிள் பாக்ஸ் என்ற அந்த புத்தகத்தில் தனது தந்தை ரஜினி பற்றிய பல சுவையான தகவல்களை எழுதியுள்ளார் அவற்றில் சில வருமாறு:
தினமும் படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பும் ரஜினி வீட்டில் உள்ள தனி அறைக்கு சென்று விடுவார். அந்த அறைக்குள் வேறு யாருக்கும் அனுமதி இல்லை. அந்த அறையில் நான்கு புறமும் கண்ணாடி பதிக்கப்பட்டிருக்கும். ஒரு மெழுகுவர்த்தியின் வெளிச்சம் மட்டுமே இருக்கும். அங்கு ரஜினி நீண்ட நேரம் இருப்பார். ஒரு நாள் ஐஸ்வர்யா இதுபற்றி அப்பாவிடம் கேட்டிருக்கிறார். அதற்கு ரஜினி "என்னோட கனவுகள் ரொம்ப பெருசு. கஷ்டப்பட்டு உழைச்சு தேவையானதை அடைஞ்சிட்டேன். பணம், புகழ் எல்லாம் தேவைக்கு அதிகமா கிடைச்சுது. விறுவிறுன்னு ஏறி மேல வந்துட்டேன். சுற்றிப்பார்த்தால் நான் தனியா நிற்கிறேன். என்னை சுற்றி இருந்தவர்களில் ஒரு சிலர்தான் என்மேல் அக்கறை உள்ளவங்கன்னு புரிஞ்சுது. பலருக்கு பொறாமைதான் இருந்தது. இதுதான் மனித இயல்புன்னு புரிஞ்சுது. யார்கிட்டேயும் மனம்விட்டு பேச முடியாது. அதனால்தான் இந்த தனிமையை நானே ஏற்படுத்திக்கிட்டேன். தினமும் அந்த அறையின் கண்ணாடி முன்னால நின்று என்னோட பேசிக்குவேன். ஒவ்வொரு கண்ணாடியிலேயும் ஒவ்வொரு ரஜினி நிப்பாங்க அவுங்களோட நான் பேசுவேன்" என்று அதற்கு விளக்கம் அளித்திருக்கிறார்.
ஒருமுறை ரஜினிகாந்த் போலியோ விளம்பரத்தில் நடித்தார். அப்போது ரஜினியின் மகள்களுக்கு போலியோ வியாதி அதனால்தான் அந்த விளம்பரத்தில் அவர் பேசியிருக்கிறார் என்ற வதந்தி நிலவியது. ஒரு நாள் வீட்டுக்கு வந்த விருந்தினர் பெண் ஒருவர் ரஜினியின் மகள்கள் ஐஸ்வர்யாவையும், சவுந்தர்யாவையும் அழைத்து நடனம் ஆடச் சொல்லியும், பாட்டுப்பாடச் சொல்லியும் கேட்டிருக்கிறார். அதாவது ரஜினியின் குழந்தைகளுக்கு போலியோ அட்டாக் இருக்கிறதா என்பதை சோதனை செய்திருக்கிறார். ரஜினியை மிகவும் வருந்த வைத்த நிகழ்வு இது.
எத்தனை பெரிய விருந்தில் கலந்து கொண்டாலும் ரஜினி ஒன்றிரண்டு வகை உணவையே எடுத்துக் கொள்வார். இதுகுறித்து ஐஸ்வர்யா ஒரு முறை கேட்டவோது... "நம் முன்னாடி நிறைய சாய்ஸ் இருந்தா வீணா குழம்பம்தான் வரும். எந்த உணவையும் முழுசா சாப்பிட முடியாது. அது உடம்புக்கு நல்லதில்லை. மனசுக்கும் திருப்தி கிடைக்காது. அதனால் ஒன்றிரண்டு உணவு வகையை தேர்வு செய்து அதை திருப்தியாக சாப்பிட்டுவிட வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.
தன் மகள்கள் மற்ற குழந்தைகளைப்போல சுதந்திரமாக வளர வேண்டும் என்று விரும்பினார் ரஜினி. இதற்காக ரஜினியின் மகள்கள் என்று வெளிஉலகம் அறியாத வண்ணம் வளர்த்திருக்கிறார். அவர்களின் புகைப்படங்கள் பத்திரிக்கையில் வராமல் பார்த்துக் கொண்டிருக்கிறார். அதோடு மகள்கள் சினிமா துறைக்கு வருவதில் அவருக்கு விருப்பம் இருந்ததில்லை. இயக்குனர், தயாரிப்பாளர் என்ற சினிமாவுக்கு வருவதை சின்ன சமாதானத்தோடு ஏற்றுக் கொண்டார்.
ரஜினிக்கு 11 வயது இருக்கும்போது அவரது ஊருக்கு அருகில் உள்ள மலையில் ஒருநாள் திடீரென சில உடைகள் காயவைக்கப்பட்டிருப்பதை கண்டிருக்கிறார். உடனே விறுவிறுவென்று மலையேறி இருக்கிறார். அங்கே ஒரு சாமியார் இருந்திருக்கிறார். அவர் ரஜினியை அருகில் அழைத்து அவர் நெற்றியில் திருநீரு பூசி ஆசீர்வதித்திருக்கிறார். சாமியாரை வணங்கிவிட்டு வந்த ரஜினி மறுநாள் போனார். அந்த சாமியார் வந்து போன எந்த அடையாளமும் அங்கு இல்லை. இதுதான் ரஜினியின் ஆன்மீக பயணத்தை தொடங்கி வைத்த சம்பவம்.
இதுபோன்று தனக்கும் அப்பாவுக்குமான பல நிகழ்வுகளையும், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விபரங்களையும், தான் சந்தத்த ஏமாற்றங்கள், நிறைவேறாத ஆசைகள் பற்றியும், தனுசுடனன காதல் பற்றியும், எழுதியிருக்கிறார் ஐஸ்வர்யா.