ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடந்தபோது விஷால் தலைமையிலான அணிக்கு ஆதரவாக பணியாற்றியவர் ஜே.கே.ரித்தீஷ். அவரும் துணை தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக இருந்தது. ஆனால் அவர் தற்போது இருக்கு அதிமுக கட்சி நடிகர் சங்க தேர்தலில் கட்சிக்காரர்கள் போட்டியிடக்கூடாது என்று அறிவித்ததால் அவருக்கு பதிலாக கருணாஸ் போட்டியிட்டார்.
ஆனால் தேர்தலுக்கு பிறகு ரித்தீசுக்கும், விஷால் அணிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தனக்கு உரிய மரியாதை தரப்படவில்லை என்று ஜே.கே.ரித்தீஷ் வருத்தப்பட்டார். எந்த பொறுப்பிலும் இல்லாதவருக்கு எப்படி முன்னுரிமை வழங்க முடியும் என்றது விஷால் தரப்பு. இதனால் ஜே.கே.ரித்தீஷ் தோல்வி அடைந்த சரத்குமார் அணிக்கு மாறினார்.
இந்த நிலையில் நடிகர் சங்கம் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிட்டு அதனையும் கைப்பற்ற முடிவு செய்திருப்பதால் விஷாலுக்கு எதிராக களம் இறங்கியிருக்கிறார் ஜே.கே.ரித்தீஷ். விஷால் அணியினர் தலைவர் பதவிக்கு நடிகை குஷ்புவை அறிவித்திருக்கிறார்கள். இந்த நிலையில் இதுவரை மவுனமாக இருந்து வந்த ஜே.கே.ரித்தீஷ் முதன் முறையாக விஷால், நாசர் மீது பகிரங்க குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது:
விஷாலிடமிருந்து நிறைய எதிர்பார்த்து ஏமாந்திருக்கிறேன். தேர்தலில்தான் போட்டி, தேர்தலுக்கு பிறகு நாம் அண்ணன் தம்பிகள் என்று சொன்னவர் தனக்கு பிடிக்காத, தன்னை ஆதரிக்காத துணை நடிகர்கள் 23 பேரை சங்கத்திலிருந்து சஸ்பெண்ட் செய்தார். நாமக்கல் நாடக நடிகர் சங்கம் ராதாரவிக்கு ஆதரவாக இருந்தது. ராதாரவிக்கு வாக்களித்த 110 நாடக நடிகர்களையும் சங்கத்திலிருந்து நீக்கி விட்டார். அன்றாட கூலிகளை பழிவாங்காதீர்கள் என்று சொன்னேன். அவர்கள் கேட்கவில்லை. மன்னிப்பு கடிதம் கொடுக்கச் சொல்லுங்கள் சேர்த்துக் கொள்கிறோம் என்று நாசர் கூறுகிறார். அனதால்தான் நீக்கப்பட்டவர்களை நீதிமன்றத்திற்கு அனுப்பி நியாயம் கேட்கச் சொன்னேன்.
தற்போது தயாரிப்பாளர் சங்கத்தையும் கைப்பற்ற நினைக்கிறார்கள். அதற்கு குஷ்புவை முன்னிறுத்துகிறார்கள். செயலாளர் பதவிக்கு விஷால் போட்டியிட நினைக்கிறார். இன்னொரு செயலாளரர் பதவிக்கு எஸ்.ஆர்.பிரபுவை நிறுத்த இருக்கிறார்கள். இவர் நடிகர் சங்க பொருளாளர் கார்த்தியின் நெருங்கிய உறவினர். இப்படி தயாரிப்பாளர் சங்கத்திலும் ஆதிக்கம் செலுத்தப் பார்க்கிறார்கள். அதனால் தயாரிப்பாளர் சங்கத்தில் விஷால் அணியை தோற்கடிப்போம். என்கிறார் ஜே.கே.ரித்தீஷ்.