சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் |
ஜீவாவுடன் நடிக்க கூடாது என்று, ஒஸ்தியில் தன்னுடன் நடித்த ரிச்சாவுக்கு தடை போட்டுள்ளாராம் நடிகர் சிம்பு. "கோ" படத்தில் ஆரம்பித்த சிம்புவுக்கும், ஜீவாவுக்குமான பனிப்போர் இன்னும் முடிந்தபாடில்லை, நீடித்துக்கொண்டே போகிறது. "கோ" படம் எடுப்பதற்கு முன்னர், சிம்புவைத்தான் அணுகியுள்ளார் டைரக்டர், ஆனால் சிம்பு நடிக்க மறுக்க, பின்னர் ஜீவாவை நடிக்க வைத்திருக்கிறார் கே.வி.ஆனந்த். படமும் மாபெரும் ஹிட்டானதால் பலரும் ஏன் நடிக்கவில்லை என்று சிம்புவிடம் ஆதங்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிம்பு என்னுடைய நண்பரே இல்லை என்று ஜீவா கூறினார். இதனையடுத்து சிம்புவுக்கும், ஜீவாவுக்கும் மோதல் தீவிரமானது. இந்நிலையில் ஜீவாவுடன் ஜோடி சேர இருந்த ரிச்சாவை, சிம்பு தடுத்துவிட்டதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது.
தமிழில் தனுஷ் உடன் "மயக்கம் என்ன", சிம்புவுடன் "ஒஸ்தி" படங்களில் நடித்து இருப்பவர் தெலுங்கு நடிகை ரிச்சா. இந்த இரண்டு படமும் இன்னும் ரிலீசாகவில்லை, ஆனால் ரிச்சாவுக்கு ஏகப்பட்ட வரவேற்பு. இந்நிலையில் நடிகர் ஜெய்யை வைத்து "வாமணன்" படத்தை இயக்கிய அகமது, தனது புதுப்படத்தில் ஜீவாவுடன் நடிக்க, ரிச்சாவை போனில் தொடர்பு கொண்டு பேசினாராம். ரிச்சாவும் சம்மதித்தாக தெரிகிறது. ஆனால் எத்தனை நாள் கால்ஷீட் என்பது மட்டும் முடிவாகமல் இருந்துள்ளது. ஹீரோயின் கிடைத்த மகிழ்ச்சியில் படத்திற்கான வேலையை துவங்கியிருக்கிறார் அகமது. இந்தநேரம் பார்த்து திடீரென, ஜீவாவுடன் நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம் ரிச்சா.
முதலில் நடிப்பதாக கூறி, இப்போது திடீரென விலகுவதாக ரிச்சா கூறியிருப்பது டைரக்டருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் ரிச்சா, இப்படி சொல்ல காரணமே சிம்பு தான் என்றும், ஜீவாவுடன், ரிச்சாவை ஜோடி சேர விடாமல் தடுத்தது அவர் தான் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.