பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் நாடகங்கள் என்றால் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மிகவும் பிடிக்கும். திடீரென்று கிளம்பிச் சென்று பார்த்துவிட்டு வருவார். தற்போது ஒய்.ஜி.மகேந்திரன் காசேதான் கடவுளடா என்ற நாடகத்தை நடத்தி வருகிறார். சித்ராலயா கோபு இயக்கத்தில் 1972ம் ஆண்டு வெளிவந்த திரைப்படத்தின் நாடக வடிவம் இது.
தற்போது சென்னையில் இந்த நாடகம் வெற்றிகரகமாக நடந்து வருகிறது. நேற்று வாணி மகாலில் மாலை 6 மணிக்கு நடந்த நாடகத்தை பார்க்க திடீரென்று ரஜினி வந்தார். தன்னுடன் தனது பேரக்குழந்தைகளையும் (தனுஷ் மகன்கள்) அழைத்து வந்தார். ரசிகர்களோடு அமர்ந்து ஜாலியாக சிரித்து, ரசித்து நாடகத்தை பார்த்தார். பின்னர் நாடகம் முடிந்ததும், நாடக கலைஞர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து கைகுலுக்கி பாராட்டினார். பின்னர் அனைவருடனும் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டார். பின்னர் அங்கிருந்து அனைவரிடமும் விடைபெற்றுச் சென்றார். ரஜினியுடன் நடிகர் கார்த்திக், நடிகை கோவை சரளா ஆகியோரும் அமர்ந்து நாடகம் பார்த்தனர்.