'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து கடந்த ஆண்டில் ஆரம்பமான படம் 'வட சென்னை'. இந்தப் படத்தை ஒரே பாகத்தில் முடித்துவிட முடியாது, மூன்று பாகமாக எடுக்க வேண்டும் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், முதல் பாகத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நடந்ததோடு சரி, அதன் பின் படத்தைப் பற்றி எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
தனுஷ் 'பவர் பாண்டி' படத்தை இயக்கவும், 'விஐபி' படத்தில் நடிக்கவும் போய்விட்டார். அடுத்து கார்த்திக் சுப்புராஜ், பாலாஜி மோகன் ஆகியோரது படங்களில் நடிக்க உள்ளார் என்றும் தகவல்கள் வெளியானது. இதனிடையே, வெற்றிமாறன், தனுஷின் தற்போதைய எதிரியான ஜி.வி.பிரகாஷ்குமார் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார் என்று செய்திகள் வெளியானது. 'வட சென்னை' படத்தை இப்போது மீண்டும் ஆரம்பிக்க மாட்டார்கள் என்றெல்லாம் பரபரப்பு உருவானது. அதோடு, முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட விஜய் சேதுபதி படத்தை விட்டு விலகிவிட்டார் என்றும் செய்திகள் வந்தன.
இந்த தகவல்கள், வதந்திகள் அனைத்திற்கும் வெற்றிமாறன் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். சில மணி நேரங்களுக்கு முன்பு அவருடைய டிவிட்டரில் 'வட சென்னை' படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு மார்ச் மாதம் முதல் வாரத்தில் ஆரம்பமாக உள்ளதாகப் பதிவிட்டுள்ளார்.