'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
நான், கண்டிப்பாக காதலித்தே திருமணம் செய்வேன், என, புருஸ்லீ பட நடிகை கிர்த்தி கர்பந்தா கூறியுள்ளார். ஹிந்தி, கன்னட படங்களில் நடித்த, நடிகை கிர்த்தி கர்பந்தா, புருஸ்லீ படம் மூலம் தமிழில் அறிமுகமாகி உள்ளார்.
தமிழில் நடித்த அனுபவம் குறித்து, அவர் கூறியதாவது: என் குடும்பத்தினர் யாரும் சினிமாவில் கிடையாது. நான் முதன்முறையாக சினிமாவில் நடித்துள்ளேன். தமிழில், புருஸ்லீ என் முதல் படம். தமிழில் பேச கற்று வருகிறேன்; விரைவில் தமிழ் பேசுவேன். சூர்யாவுடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆசையாக உள்ளது. அதே போல, மணிரத்னம் இயக்கும் படத்திலும் நடிக்க ஆசை. காதல் திருமணமே சிறந்தது; என் திருமணம், காதல் திருமணமாகவே இருக்கும். அதற்கு இன்னும் பல ஆண்டுகளாகும்; நல்ல படங்களில் நடிப்பதே இப்போதைய இலக்கு.இவ்வாறு அவர் கூறினார்.
படத்தில் நடித்த, ஜி.வி.பிரகாஷ்குமார் கூறுகையில், எனக்கு பட்டம் எல்லாம் வேண்டாம்; வேண்டுமானால், டார்லிங் ஜி.வி.பிரகாஷ் என, அழையுங்கள். நான், காமெடியாக
நடிப்பதாக கூறுகின்றனர். இனி வரும் படங்கள், சீரியஸ் ஆக இருக்கும், என்றார்.