ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் இப்போது மலையாளத்தில் முன்னணி நடிகர். அவர் நடிக்கும் படங்கள் அனைத்துமே ஹிட்டாகி வருகிறது. தமிழில் வாயை மூடி பேசுவோம் படத்தில் நடித்தார். அது வெற்றி பெறவில்லை. அதன் பிறகு மணிரத்னம் இயக்கத்தில் ஓகே கண்மணி படத்தில் நடித்தார். அது வெற்றி பெற்றது. மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் காற்றுவெளியிடை படத்தில் அவர்தான் நடிப்பதாக இருந்தது. மலையாளப் படங்களில் பிசியாகிவிட்டதால் நடிக்கவில்லை.
இப்போது மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கிறார். இன்னும் டைட்டில் முடிவு செய்யப்படாத இந்தப் படத்தை புதுமுக இயக்குனர் ரா.கார்த்திக் என்பவர் இயக்குகிறார். இது ஒரு இளைஞனின் வாழ்க்கையில் கடந்து செல்லும் மூன்று பெண்களை பற்றிய கதை. இதில் மூன்று ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். தனுசுடன் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்து வரும் மேகா ஆகாஷ், ஒரு நாள் கூத்து படத்தில் அறிமுகமான நிவேதா பெத்துராஜ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இன்னொரு ஹீரோயின் கேரக்டர் நடுத்தர வயது கேரக்டர். அவர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. தற்போது மலையாளப் படங்களில் பிசியாக நடித்து வரும் துல்கர் சல்மான் மே மாதம் இந்தப் படத்திற்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.