தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
வெள்ளித்திரையில் கனவு தேவதையாக வந்து ரசிகர்களை கொள்ளை கொண்ட சிம்ரன், இப்போது சின்னத்திரையில் ஆர்வம் காட்டத் துவங்கியுள்ளார். பாலிமர் டி.வி.,யில் "சுந்தரகாண்டம்" என்ற தொடரில் நடித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு சினிமாவிற்கு முழுக்கு போட்ட சிம்ரனை, பல பேர் மீண்டும் நடிக்க அழைத்தார்கள். இதனையடுத்து கணவர் சம்மதத்துடனும், ஏகப்பட்ட கண்டிஷன்களுடன் மீண்டும் நடிக்க வந்தார் சிம்ரன். ஆனால் கதாநாயகியாக அல்ல, மாறாக அக்கா, அண்ணி போன்ற குணச்சித்திர வேடங்களில் நடித்தார். ஆனால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இருந்தபோதிலும் நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று காத்திருந்தார்.
இந்நிலையில் சிம்ரனுக்கு, இரண்டாவது முறையாக குழந்தை பிறக்க, நடிப்பை விட்டு சிலகாலம் ஒதுங்கி இருந்த அவர், மீண்டும் நடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். அதிலும் குறிப்பாக வெள்ளித்திரையை காட்டிலும் சின்னத்திரைக்கு ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது, ஜெயா டி.வி.யில் ஜாக்பாட் நிகழ்ச்சி நடத்தி வரும் சிம்ரன், கூடவே பாலிமர் டி.வி.யில் சுந்தரகாண்டம் எனும் தொடரில் நடித்து வருகிறார். வெளிநாட்டு மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டு, சிலர் படுகிற வேதனையைதான் இந்த கதை சொல்லப்பட்டுள்ளதாம். திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு இந்த தொடர் ஒளிப்பரப்பாகிறது.