அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
தனது பாஸ்போர்ட்டை புதுப்பித்து தர பாஸ்போர்ட் அலுவலகம் மறுத்ததை தொடர்ந்து குஷ்பு வழக்கு தொடர்ந்துள்ளார். நடிகை குஷ்பு தனது பாஸ்போர்ட் பக்கங்கள் நிறைவானதைத் தொடர்ந்து அதனை புதுப்பிக்க மனுச் செய்தார். ஆனால் உங்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன என்று கூறி பாஸ்போர்ட் புதுப்பிக்க மறுத்து விட்டனர். இது தொடர்பாக குஷ்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
என்னுடைய பாஸ்போர்ட் 2012-ம் ஆண்டு மார்ச் 9-ந் தேதி முதல் 2022-ம் ஆண்டு மார்ச் 8-ந் தேதி வரை, 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். ஆனால், நான் அலுவலக பணிக்காகவும், குடும்பத்துடன் சுற்றுலாவுக்காகவும் அடிக்கடி வெளிநாடு சென்று வந்தேன். இதனால், பாஸ்போர்ட்டில் உள்ள பக்கங்கள் அனைத்தும் முடிந்து விட்டன. இதையடுத்து புதிய தாள்களை ஒட்டித் தரும்படி சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்தேன். ஆனால், புதிய தாள்களை ஒட்டும் நடவடிக்கை தற்போது இல்லை என்றும், அதற்கு பதில் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க கோரி விண்ணப்பம் செய்து, அதன் மூலம் புதிய பாஸ்போர்ட்டை பெற்றுக் கொள்ளும்படியும் கூறினார்கள்.
புதிய பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பம் செய்தேன். ஆனால், என் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதால், பாஸ்போர்ட்டை புதுப்பித்து தர முடியாது என்று மண்டல பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நான் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில், சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், அரசு அதிகாரியின் உத்தரவை மீறி செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் என் மீது ஒரு கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதே சட்டப்பிரிவுகளின் கீழ், தேனி மாவட்டம், பி.சி.பட்டி போலீஸ் நிலையத்திலும், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் போலீஸ் நிலையத்திலும் தலா ஒரு வழக்குகள் என்று மொத்தம் என் மீது 3 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதுகுறித்து ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தேன். இந்த 3 வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தும், எனக்கு முன்ஜாமீன் வழங்கியும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால், இந்த வழக்குகளை காரணம் காட்டி, எனக்கு புதிய பாஸ்போர்ட்டை வழங்க அதிகாரிகள் மறுக்கின்றனர். எனக்கு பாஸ்போர்ட் வழங்காததால், வெளிநாடு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. புதிய பாஸ்போர்ட்டை வழங்கும்படி மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குஷ்பு கூறியுள்ளார்.
மனுவை விசாரித்த நீதிமன்றம் இது தொடர்பான பதில் மனுவை தாக்கல் செய்யுமாறு மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு உத்தரவிட்டது.