Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாஸ்போர்ட் புதுப்பிக்க மறுப்பு: குஷ்பு வழக்கு பதிவு

07 ஜன, 2017 - 12:53 IST
எழுத்தின் அளவு:
Kushboo-filed-case-for-not-renewing-passport

தனது பாஸ்போர்ட்டை புதுப்பித்து தர பாஸ்போர்ட் அலுவலகம் மறுத்ததை தொடர்ந்து குஷ்பு வழக்கு தொடர்ந்துள்ளார். நடிகை குஷ்பு தனது பாஸ்போர்ட் பக்கங்கள் நிறைவானதைத் தொடர்ந்து அதனை புதுப்பிக்க மனுச் செய்தார். ஆனால் உங்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன என்று கூறி பாஸ்போர்ட் புதுப்பிக்க மறுத்து விட்டனர். இது தொடர்பாக குஷ்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:


என்னுடைய பாஸ்போர்ட் 2012-ம் ஆண்டு மார்ச் 9-ந் தேதி முதல் 2022-ம் ஆண்டு மார்ச் 8-ந் தேதி வரை, 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். ஆனால், நான் அலுவலக பணிக்காகவும், குடும்பத்துடன் சுற்றுலாவுக்காகவும் அடிக்கடி வெளிநாடு சென்று வந்தேன். இதனால், பாஸ்போர்ட்டில் உள்ள பக்கங்கள் அனைத்தும் முடிந்து விட்டன. இதையடுத்து புதிய தாள்களை ஒட்டித் தரும்படி சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்தேன். ஆனால், புதிய தாள்களை ஒட்டும் நடவடிக்கை தற்போது இல்லை என்றும், அதற்கு பதில் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க கோரி விண்ணப்பம் செய்து, அதன் மூலம் புதிய பாஸ்போர்ட்டை பெற்றுக் கொள்ளும்படியும் கூறினார்கள்.


புதிய பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பம் செய்தேன். ஆனால், என் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதால், பாஸ்போர்ட்டை புதுப்பித்து தர முடியாது என்று மண்டல பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.


நான் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில், சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், அரசு அதிகாரியின் உத்தரவை மீறி செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் என் மீது ஒரு கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதே சட்டப்பிரிவுகளின் கீழ், தேனி மாவட்டம், பி.சி.பட்டி போலீஸ் நிலையத்திலும், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் போலீஸ் நிலையத்திலும் தலா ஒரு வழக்குகள் என்று மொத்தம் என் மீது 3 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதுகுறித்து ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தேன். இந்த 3 வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தும், எனக்கு முன்ஜாமீன் வழங்கியும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால், இந்த வழக்குகளை காரணம் காட்டி, எனக்கு புதிய பாஸ்போர்ட்டை வழங்க அதிகாரிகள் மறுக்கின்றனர். எனக்கு பாஸ்போர்ட் வழங்காததால், வெளிநாடு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. புதிய பாஸ்போர்ட்டை வழங்கும்படி மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குஷ்பு கூறியுள்ளார்.


மனுவை விசாரித்த நீதிமன்றம் இது தொடர்பான பதில் மனுவை தாக்கல் செய்யுமாறு மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு உத்தரவிட்டது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in