பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
களவாணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி தொடர்ந்து, 'வாகைசூடவா', 'நய்யாண்டி', 'சண்டி வீரன்' ஆகிய படங்களை இயக்கியவர் சற்குணம். இவர் அடுத்து மாதவன் நடிப்பில் ஒரு படத்தை இயக்குகிறார்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி சற்குணம் இயக்கும் இந்த படத்தை 'ஆரஞ்சு மிட்டாய்', 'றெக்க' ஆகிய படங்களை தயாரித்த கணேஷ் தயாரிக்கிறார். இந்தப் படத்தை முதல் பிரதி அடிப்படையில் சற்குணம் தயாரிக்கிறார்.
தற்போது நயன்தாரா நடிப்பில் 'டோரா' படத்தையும் இவர் தயாரித்து வருகிறார். பறவைகள் மற்றும் விலங்குகள் இடம் பெறும் இப்படம் குழந்தைகள் மற்றும் ஃபேமிலி ஆடியன்ஸை கவரும் விதமாக ஒரு ஆக்ஷன், அட்வெஞ்சர் படமாக எடுக்கப்படவிருக்கிறதாம். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு தாய்லாந்து, மங்கோலியா, தஜிகிஸ்தான் போன்ற நாடுகளில் நடக்கவிருக்கிறது.
இப்படத்திற்கு ஜிப்ரான் இசை அமைக்கிறார். மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது.
இன்னும் பெயரிடப்படாத இந்த படம் தமிழ், ஹிந்தி என இரண்டு மொழிகளில் ஒரே நேரம் தயாராகவிருக்கிறது. தன்னுடைய சம்பளத்துக்கு பதில் ஹிந்தி ரைட்ஸை வாங்கிக் கொண்ட மாதவன் இந்தப் படத்தை நேரடி ஹிந்திப்படமாக வெளியிட உள்ளாராம்.