பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் |
நேற்றைய தினம் மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியவர்கள் நடிகர்களான சான்ட்ரா தாமஸும், விஜய்பாபுவும். நடிகர்கள் என்பதைவிட இரண்டுபேரும் இணைந்து 'பிரைடே பிலிம் ஹவுஸ்' என்கிற தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்களாகவே அதிகம் புகழ்பெற்றவர்கள்.. விஜய்யின் 'தெறி' படத்தை கேரளாவில் வெளியிட்டவர்களும் இவர்கள் தான். இந்தநிலையில் தனியாக பிரிந்துவிட முடிவு செய்த சான்ட்ரா தாமஸ் இதுகுறித்து விஜய்பாபுவிடம் பேசப்போனபோது அவர் தன்னை அடித்துவிட்டதாக போலீஸில் புகார் கொடுத்தார் சான்ட்ரா தாமஸ். ஆனால் எதிர்பாரதவிதமாக இந்த இரண்டு பேர் மீதும் மோசடி வழக்கு தொடர்பாக புகார் கொடுத்துள்ளார் இயக்குனர் ஜான் வர்கீஸ் என்பவர்..
இவர் வேறு யாருமல்ல.. கடந்த வருடம் மலையாளத்தில் விஜய்பாபுவும் சான்ட்ராவும் இணைந்து தயாரித்த 'அடி கப்பியாரே கூட்டமணி' என்கிற ஹிட் படத்தை இயக்கிய இயக்குனர்தான்.. அந்தப்படத்தை அவர் முதலில் தமிழில் தான் இயக்க விரும்பினாராம். ஆனால் இந்த கதையைகேட்ட விஜய்பாபுவும் சான்ட்ராவும் இதை மலையாளத்தில் நாங்கள் தயாரிக்கிறோம் என கூறியதால் முதலில் இந்தப்படத்தை மலையாளத்தில் இயக்கினார் ஜான் வர்கீஸ். ஆனாலும் மற்ற மொழிகளில் இந்தப்படத்திற்கான உரிமை தனக்குத்தான் சொந்தம் என அதற்கான குறிப்புகளையும் அக்ரிமென்ட்டில் சேர்த்துக்கொள்ள வலியுறுத்தினாராம் இயக்குனர் ஜான் வர்கீஸ்..
ஆரம்பத்தில் இதற்கெல்லாம் சரியென தலையாட்டிய இவர்கள் இருவரும் படப்பிடிப்பு பிசியாக இருந்த ஒருநாளில் இயக்குனரிடம் ஒரு அக்ரிமென்ட்டில் கையெழுத்து வாங்கினார்களாம்.. ஆனால் பின்னாளில் இந்தப்படத்தை தமிழில் இயக்குவதற்காக ஒரு தயாரிப்பாளரை தயார் செய்துகொண்டு கிளம்பிய ஜான் வர்கீசுக்கு பெரிய அதிர்ச்சியை தந்தார்களாம் விஜய்பாபுவும் சான்ட்ரா தாமஸும். அதாவது அந்த ரைட்ஸை இயக்குனர் தங்களுக்கு தந்துவிட்டதாக பத்திரத்தை காண்பித்துள்ளதோடு, அந்தப்படத்தை தாங்களே ரீமேக் செய்து தமிழில் தயாரிக்க இருப்பதாகவும் கூறி இயக்குனரை விரட்டினார்களாம்..
இந்தநிலையில் விஜய்பாபுவுக்கும் சான்ட்ராவுக்கும் இடையே தகாராறு ஏற்பட்டது.. இதனை தொடர்ந்தே தனக்கு ஏற்பட்ட அநீதி குறித்து இயக்குனர் ஜான் வர்கீஸ் வெளியே கொண்டுவந்துள்ளது இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.