ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளை அவதூறாக பேசியது தொடர்பாக வருத்த தெரிவித்த விஷாலின் மன்னிப்பை ஏற்க முடியாது, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது சஸ்பெண்ட் தான் தயாரிப்பாளர் சங்கம் தீர்க்கமாக கூறியுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளரான விஷால், தயாரிப்பாளர் சங்கத்திலும் உறுப்பினராக உள்ளார். விரைவில் நடைபெற இருக்கும் தயாரிப்பாளர் சங்க தேர்தலிலும் விஷால் அணி களமிறங்க உள்ளது. இந்த நிலையில் ஒரு பேட்டியில், விஷால் தயாரிப்பாளர் சங்கத்தை விமர்சித்தார். அதில் தயாரிப்பாளர்களின் பிரச்னையை தீர்க்காமல் சங்க உறுப்பினர்கள் போண்டா, பஜ்ஜி சாப்பிட்டு கொண்டு கட்டப்பஞ்சாயத்து நடத்துகிறார்கள் என்று பேசியிருந்தார். இது தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளை அதிருப்திக்கு உள்ளாக்கியது. சங்க ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாக விஷால் பேசுவதாக கூறி அவரை தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து நீக்கியது தயாரிப்பாளர் சங்கம்.
இதை எதிர்த்து விஷால், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். விஷால் தனது கருத்திற்கு வருத்தம் தெரிவித்தால் இடைநீக்கம் திரும்ப பெறுவது பற்றி தயாரிப்பாளர் சங்கம் பரிசீலிக்கும் என தயாரிப்பாளர் சங்கம் கூறியிருந்தது. விஷாலும் மன்னிப்பு கேட்டார். இதையடுத்து விஷால் மீதான சஸ்பெண்ட் நீக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு மீதான விசாரணை இன்று மீண்டும் வந்தது. அப்போது தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், விஷால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பின்னரும் தொடர்ந்து சங்கம் பற்றி அவதூறு பேசி வருகிறார். எனவே அவரது மன்னிப்பை ஏற்க முடியாது, சஸ்பெண்ட்டையும் நீக்க முடியாது என்று சங்கம் கூறியுள்ளது. இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை ஜன., 10-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.