ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி |
தமிழ் சினிமாவால் புறக்கணிக்கப்பட்டு ஹிந்தியில் பெரிய வெற்றி பெற்ற நடிகைகள் நிறைய உண்டு. அந்தக் காலத்தில் ஹேமமாலினி, ரேகா, ரதி, இப்போது வித்யாபாலன், அதிதி, பிரியங்கா சோப்ரா. அந்த வரிசையில் இணைந்தவர் யாமி கவுதம்.
இமாச்சல பிரதேச அழகியான இவர் கவுரவம் படத்தில் சிறிய கேரக்டரில் நடித்தார். அதன்பிறகு தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் படத்தில் ஜெய் ஜோடியாக நடித்தார். இந்தப் படம் உரிய நேரத்தில் வெளிவந்திருந்தால் யாமியும் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயின் ஆகியிருப்பார். ஆனால் 3 வருடத்திற்கு பிறகுதான் வெளிவந்தது. அதற்குள் இந்திக்கு சென்று விட்ட யாமி அங்கு மளமளவென உயர்ந்துவிட்டார். ஆக்ஷன் ஜாக்சன் படம் பெரிய இடத்தை அவருக்கு கொடுத்தது. அதன் பிறகு முன்னணி நடிகையானர்.
தற்போது அவர் ஹிருத்திக் ரோஷனுடன் இணைந்து காபில் என்ற படத்தில் நடித்துள்ளார். பிலிப்கார்ட் புரொடக்ஷன் தயாரித்துள்ள இந்தப் படத்தை சஞ்சய்குப்தா இயக்கி உள்ளார். இது கமல் நடித்த ராஜபார்வை மாதிரியான கதை.
31 வயதான பிண்ணனி குரல் கலைஞனான ரோஹன் தனது பெரும்பான்மையான வாழ்கையை ஸ்டுடியோக்களிலும், இரவை தனது இல்லத்திலும் கழிக்கிறார். பிறப்பிலேயே பார்வையற்றவனான ரோஹனுக்கு அனைவரும் வாழும் ஒரு சாதரணமான வாழ்க்கையை மேற்கொள்வதே வாழ்வின் கனவாக இருக்கிறது. ஒரு தருணத்தில் தன்னைப்போன்று பார்வையற்ற சுப்ரியாவை சந்திக்க நேரும் அவன், அவள் மீது காதல் வயப்படுகிறான்.
ரோஹனின் நேர்மையும், தன்னம்பிக்கையும் அவளை கவர்கிறது. ஒருவர் மீது ஒருவர் பேரன்பை வைத்திருக்கும் நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். எதிர்பாராத விதமாக ரோஹன், சுப்ரியாவை பிரிய நேரிடுகிறது. சுப்ரியாவின் பிரிவு ரோஹனின் வாழ்க்கையை இருளில் தள்ளி தனிமை படுத்துகிறது. சுப்ரியா பிரிவின் காரணத்தை ஆராய முற்படும் ரோஹனுக்கு, தன்னை சுப்ரியா பிரிந்ததற்கான உண்மை புலப்படுகிறது. தன்னை தனிமை படுத்தியவர்களுக்கெதிரான யுத்தத்தில் ஈடுபடுகிறார் ரோஹன். அதில் ரோஹன் எப்படி வெற்றிபெறுகிறார் என்பதுதான் கதை.
காபில் படத்தை இ4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் பலம் என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறது. ஜனவரி 25ந் தேதி உலகம் முழுவதும் படம் வெளிவருகிறது. யாமி கவுதம் இந்திக்கு சென்றாலும் தமிழில் ஒரு நல்ல இடத்தை பிடிக்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார். பலம் படம் தமிழ்நாட்டில் வரவேற்பை பெற்றால் மீண்டும் தமிழில் நடிக்க இருக்கிறார். இதற்கான தனி மாஜேரையும் நியமித்திருக்கிறார்.