வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
"வெளிநாட்டு தொழில்நுட்பத்தை கற்றுக் கொண்டு அதன் மூலம் நம் நாட்டு கலாச்சாரத்தை வெளிநாட்டுக்கு சொல்லுங்கள்" என்று இயக்குனர் பாரதிராஜா, இளம் இயக்குனர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் நேற்று துவங்கிய 14வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவை துவக்கி வைத்து பேசிய அவர் இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் பேசியதாவது:
தமிழ் நாட்டின் தென்கோடியில் உள்ள விவசாய குடும்பத்தில் பிறந்தவன் நான். எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களை பார்த்து வளர்ந்தவன். சினிமா ஒரு மாய உலகமாக, சொர்க்க பூமியாக தெரிந்தது. அதனால் ஆர்வத்தோடு இதற்குள் வந்தேன். வந்த பிறகுதான் இது சொர்க்கபூமியல்ல... இது ஒரு சமூக ஊடகம், இதன் மூலமும் மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என்று தெரிந்து கொண்டேன்.
உலகை ஒன்றிணைக்க அன்று கவிஞர்கள் இருந்தார்கள், பின்னர் இலக்கிய வாதிகள் வந்தார்கள். ஆனால் இன்று உலகை இணைக்கும் மிகப்பெரிய ஊடகம் சினிமா. நம் கலாச்சாரத்தை பிறரும், பிறர் கலாச்சாரத்தை நாமும் அறிந்து கொண்டு உலகமே சுருங்கி விட்டது. முன்பு சினிமா பார்க்க நிறைய சிரமப்பட வேண்டும். ஆனால் இன்று வெளியான மறுநாளே நம் உள்ளங்கையில் சினிமா இருக்கிறது.
இதுபோன்ற பட விழாக்கள் மூலம் இன்றைய இளம் இயக்குனர்கள் சினிமா தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்ள வேண்டும். அதன் மூலம் நம் கதையை நம் கலாச்சாரத்தை உலகுக்கு சொல்ல வேண்டும். இன்று ஈரானிய படங்களை கொண்டாடுகிறோம். காரணம் அது தனது கலாச்சாரத்தை சொல்கிறது. அதுபோல நாமும் நம் சினிமாவை உலகத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். இவ்வாறு பாரதிராஜா பேசினார்.
விழாவில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, தென்னிந்திய நடிகர் சங்க செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, சேம்பர் முன்னாள் தலைவர் கல்யாண். பொதுச் செயலாளர் காட்ரகட்ட பிரசாத், இயக்குனர் பாரதிராஜா, நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், சுஹாசினி, பூர்ணிமா, ரோகினி. இண்டோ சினி அப்ரிசேஷன் தலைவர் கண்ணன், செயலாளர் தங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். வருகிற 12ந் தேதி வரை நடக்கும் இந்த படவிழாவி 50 நாடுகளைச் சேர்ந்த 150 படங்கள் திரையிடப்படுகிறது.