இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
வருகிற 14ந் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் எல்லா சேனல்களும் போட்டி போட்டுக்கொண்டு புத்தம் புதிய திரைப்படங்களை ஒளிபரப்புகிறது. இந்த ரேஸில் இப்போது முன்னணியில் இருக்கிறது விஜய் டி.வி. இந்த ஆண்டு வெளிவந்த சூப்பர் ஹிட் இந்திப் படமான எம்.எஸ்.தோனி, திரைக்கு வந்த சில மாதங்களே ஆன கடவுள் இருக்கான் குமாரு படங்களை ஒளிபரப்ப இருக்கிறது.
எம்.எஸ்.டோனி
பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ தயாரித்த பிரமாண்ட படம் எம்.எஸ்.தோனி அன்டோல்ட் ஸ்டோரி. இந்திய கிரிக்கெட் கேப்டன் மகேந்திரசிங் தோனி பிறந்தது முதல் உலக கோப்பையை வென்றது வரையிலான அவரது வாழ்க்கை கதை. இதில் அவரது சிறு வயது விளையாட்டு ஆர்வம், கிரிக்கெட்டில் ஜெயிக்க போராட்டம், ரெயில்வே டிக்கெட் பரிசோதகராக பணியாற்றியது, வெற்றி பெற்ற ஒரு காதல், தோல்வி அடைந்த ஒரு காதல் என பயணிக்கும் கதை. நீரஜ் பாண்டே இயக்கிய இந்தப் படத்தில் சுஷாந்த் சிங், தோனியாக நடித்தார். அவரது காதலியாக திஷா பதானியும், மனைவியாக கியாரா அத்வானியும் நடித்திருந்தனர். அனுபம் கேர் தோனியின் தந்தையாகவும், பூமிகா தோனியின் அக்காவாகவும் நடித்திருந்தனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான இந்தப் படம் 100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. தமிழ்நாட்டிலும் 50 நாட்களை கடந்து ஓடியது.
கடவுள் இருக்கான் குமாரு
காமெடி ஸ்பெஷலிஸ்ட் ராஜேஷ்.எம் இயக்கிய படம். ஜி.வி.பிரகாஷ், ஆனந்த், நிக்கி கல்ராணி, பிரகாஷ்ராஜ், நான் கடவுள் ராஜேந்திரன், ரோபோ சங்கர், சிங்கம்புலி, ஆர்ஜே.பாலாஜி, ஊர்வசி, கோவை சரளா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்த படம். ஜி.வி.பிரகாஷ் இசை, சக்தி சரவணன் ஒளிப்பதிவு. இரண்டு நாளில் திருமணம் நடக்க இருக்கும் நிலையில் பாண்டிச்சேரியில் பேச்சுரல் பார்ட்டி நடத்திவிட்டு வரும் வழியில் சரக்கு பாட்டிலோடு லஞ்ச போலீஸ் அதிகாரி பிரகாஷ்ராஜிடம் மாட்டிக்கொண்டு தவிக்கும் புதுமாப்பிள்ளையின் கதை. கடந்த நம்பர் 18ந் தேதி வெளியான படம். இரண்டு மாதத்திற்குள்ளாகவே சின்னத்திரைக்கு வந்திருக்கிறது.