ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நீண்ட நாட்களுக்கு பிறகு 'அச்சாயன்ஸ்' என்கிற படத்தில் நடிப்பதற்காக மலையாள திரையுலகில் என்ட்ரி கொடுத்திருக்கிறார் பிரகாஷ்ராஜ். ஜெயராம் ஹீரோவாக நடிக்கிறார். 'ஆடுபுலியாட்டம்' என்கிற ஹாரர் த்ரில்லரை இயக்கிய கண்ணன் தாமரக்குளம் என்பவர்தான் இந்தப்படத்தை இயக்குகிறார். இனியா முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். ஏற்கனவே பிரகாஷ்ராஜும் ஜெயராமும் சரோஜா, பரமசிவம் ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இந்தப்படத்தில் பிரகாஷ்ராஜுக்கு போலீஸ் அதிகாரி வேடம்.
பிரகாஷ்ராஜை போலவே முக்கியமான வேடத்தில் நடிக்கிறார் மலையாள குணச்சித்திர நடிகர் சித்திக். பிரகாஷ்ராஜின் நடிப்புக்கு தீவிர ரசிகரான சித்திக்கிற்கு அவருடன் நடிப்பதில் அளவுகடந்த சந்தோசம்.. ஆனால் இருவரும் சேர்ந்து நடித்த ஒரு காட்சியில் சித்திக்கின் உணர்வுப்பூர்வமான நடிப்பை பார்த்து அசந்துபோய்விட்டாராம் பிரகாஷ்ராஜ். அதுமட்டுமல்ல, அந்தக்காட்சி முடிந்தபிறகு படக்குழுவினருடன் சேர்ந்து கைதட்டி தனது பாராட்டை தெரிவித்த பிரகாஷ்ராஜ், சித்திக்கின் பல படங்களில் அவரது மாறுபட்ட நடிப்பு தன்னை கவர்ந்ததாகவும் கூறினாராம்