டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ் ஹிந்தியில் மட்டுமல்லாது, தெலுங்கு திரை உலகிலும் ஸ்ரீதேவி தனக்கென ஒரு தனி இடத்தை தக்க வைத்தவர். பாகுபலி படத்தில் ரம்யாகிருஷ்ணன் ஏற்ற லட்சிய வேடத்திற்கு இயக்குனர் ராஜமௌலியின் விருப்பம் ஸ்ரீதேவி தான். ஸ்ரீதேவியின் சம்பளம் கட்டுபடியாகாததால் ராஜமௌலி ரம்யாகிருஷ்ணனை தேர்வு செய்தார். பாகுபலி படத்தின் வெற்றிக்கு பின்னர் ஸ்ரீதேவி தான் செய்த தவறை உணர்ந்து வருத்தப்பட்டாராம். இதனால் டோலிவுட்டில் வரும் அழைப்புகளை பரிசீலனை செய்து முடிவெடுக்க திட்டமிட்டிருக்கும் ஸ்ரீதேவி, தெலுங்கு இயக்குனர் கே.எஸ்.ரவீந்திராவிற்கு அதிக நேரம் ஒதுக்கி படத்தின் கதையைக் கேட்டுள்ளார். காரணம் அப்படத்தின் நாயகன் ஜூனியர் என்.டி.ஆர் என்பதாகும். ஜனதா கேரேஜ் படத்தின் வெற்றிக்கு பின்னர் இயக்குனர் கே.எஸ்.ரவீந்திரா இயக்கும் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவுள்ளார். இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஸ்ரீதேவியிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகின்றது. ஸ்ரீதேவியும் இப்படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.