அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை நேற்று திரைப்படத்துறையினர் சந்தித்து பேசினார்கள். நடிகை சுஹாசினி, நடிகர் மனோபாலா, திரைப்பட வர்த்தக சபை முன்னாள் தலைவர் கல்யாண், பொதுச்செயலாளர் காட்ரகட்ட பிரசாத், ரவி கொட்டாரக்கரா, இண்டோ சினி அப்ரிசேஷன் செயலாளர் தங்கராஜ் ஆகியோர் சந்தித்தனர். சந்திப்புக்கு பிறகு நடிகை சுஹாசினி நிருபர்களிடம் கூறியதாவது:
சென்னையில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவுக்கு முதல்வரை அழைத்துள்ளோம். அரசு ஆதரவுடன் நடக்கும் விழாவுக்கு அரசின் உதவியை கேட்டோம். இந்திய சினிமா தற்போது 100 ஆண்டுகளை கடந்துள்ளது. இந்திய சினிமா வரலாற்றில் சென்னைக்கு தான் முதலிடம் இருக்கிறது. மும்பையை விட சென்னை தான் சினிமாவின் தலைநகரம்.
தமிழ் சினிமாவுக்கு ஒரு நிரந்தர அடையாளம் வேண்டும். சென்னை நகரில் தமிழ் சினிமா ஜாம்பவான்களின் பெயரில் அலங்கார வளைவுகள் அமைக்கப்படவேண்டும். தமிழ் சினிமாவுக்கென்று தனி அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வைத்திருக்கிறோம். என்றார்.