ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தரணி இயக்கத்தில் விக்ரம் நடித்த தில் படத்தில் வித்யாசாகரின் இசையில், கண்ணுக்குள்ள கெழுத்தி வச்சிருக்கா சிறுக்கி -என்ற பாடலை பாடி பிரபலமானவர் பாடகர் மாணிக்க விநாயகம். அதன்பிறகு ரன் படத்தில் தேரடி வீதியில் தேவதை வந்தா திருவிழான்னு தெரிஞ்சிக்கோ, தூள் படத்தில் அருவா மீசை குருவா பார்வை ஆறுமுகந்தான் கையவச்சா தில், சிங்கம் படத்தில் நானே இந்திரன் என பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடிய அவருக்கு சமீபகாலமாக சினிமாவில் பின்னணி பாடும் வாய்ப்புகள் குறைந்து விட்டது. அதனால் தற்போது நடிப்பில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார் மாணிக்க விநாயகம்.
ஏற்கனவே, திருடா திருடி, கிரி, கம்பீரம், வேட்டைக்காரன், யுத்தம் செய் என பல படங்களில் அப்பா மற்றும் கேரக்டர் ரோல்களில் நடித்துள்ள அவர், தற்போது சென்னைக்கு பக்கத்துல என்ற படத்தில் கிராமத்து தந்தையாக நடித்து வருகிறார். மேலும் தொடர்ந்து நடிப்பதில் அதிக ஆர்வம் இருந்தபோதும், தன்னைத்தேடி வரும் படங்களில் தனக்கு பிடித்தமான கேரக்டராக இருந்தால் மட்டுமே ஓகே பண்ணுகிறாராம் அவர். இல்லையேல், இந்த வேடம் எனக்கு செட்டாகாது என்று திருப்பி அனுப்பி விடுவதாக கூறும் மாணிக்க விநாயகம், சினிமாவில் பாடல் பாடும் வாய்ப்பு குறைந்தபோதும், கச்சேரிகளில் நிறைய பாடுகிறாராம். சில இசையமைப்பாளர்கள் அவரை வெளிநாடுகளில் நடக்கும் கச்சேரிகளில் பாடவும் அழைக்கிறார்களாம். ஆக, நடிப்பு, கச்சேரி என்று இப்போதும் மாணிக்க விநாயகம் பிசியாகவே இருக்கிறாராம்.