'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மாடலிங் துறையில் இருந்து சின்னத்திரைக்கு வந்தவர் திவ்யா. பல சீரியல்களில் மாறுபட்ட கேரக்டர்களில் நடித்துள்ள அவர், ஒரே நேரத்தில் செண்டிமென்ட், வில்லி, குணசித்ர வேடம் என மூன்று சீரியல்களில் மூன்றுவிதமான வேடங்களில் நடித்தது எனக்கு மறக்க முடியாத எக்ஸ்பீரியன்சாக அமைந்தது என்கிறார்.
தினமலர் இணையதளத்திற்கு அவர் அளித்த பேட்டி...
நிறைய மாடலிங் செய்ய வேண்டும் என்ற ஆசையில்தான் மீடியாவிற்குள் வந்தேன். அப்போதுதான் நடிப்பதற்கான வாய்ப்புகள் வரத் தொடங்கின. அதையடுத்து நடிக்கத் தொடங்கிய எனக்கு குறுகிய காலத்தில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வரத் தொடங்கின. அதனால் ஒருகட்டத்தில் முழுநேர சீரியல் நடிகையாகி விட்டேன்.
அதிலும், ஒரு சீரியலில் வில்லி என்றால், இன்னொரு சீரியலில் செண்டிமென்ட் வேடம், மற்றொரு சீரியலில் மாறுபட்ட குணசித்ர வேடம் என ஒரே நேரத்தில் மூன்று விதமான கேரக்டர்களில் மாறி மாறி நடித்தேன். ஒவ்வொரு ஸ்பாட்டுக் குள் செல்லும்போதும் அந்த கேரக்டரை மனதில் உள்வாங்கி அதுவாகவே மாறி விடுவேன். அதனால் குறுகிய காலத்தில் எந்த மாதிரியான வேடமென்றாலும் நடிக்கக்கூடிய அளவுக்கு நடிப்பில் தேர்ச்சி பெற்று விட்டேன். அதேசமயம், நான் நிஜத்தில் ஜாலியான, போல்டான பெண் என்றபோதும், வில்லி வேடத்தில் நடிக்க மட்டும் கொஞ்சம் கஷ்டப்பட்டேன். பின்னர் அதிலும் தேர்ச்சி பெற்று விட்டேன்.
குறிப்பாக, நான் நடிக்கிற சீரியல்களில் வெறும் பொழுதுபோக்காக மட்டுமே இல்லாமல் ஏதோ ஒரு வகையில் சீரியல் பார்ப்பவர்களுக்கு கருத்து சொல்லக்கூடியதாக அல்லது விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதனால் எதிகாலத்தில் அந்த மாதிரியான வேடங்களை தேடிப்பிடித்து நடிப்பேன். அதோடு, கேளடி கண்மணி, லட்சுமி வந்தாச்சு சீரியல்களைப்பார்த்து விட்டு எனக்கு இப்போது சினிமாவில் இருந்தும் நடிக்க வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன. அந்த வகையில், ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கும் அடங்காதே படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடிக்கிறேன். ரொம்ப நல்ல வேடம். முதல் படத்திலேயே சரத்குமாருடன் நடிக்க சான்ஸ் கிடைத்திருப்பதால் அடுத்தபடியாக மேலும் சில படங்கள் கமிட்டாகியுள்ளன. அதனால், எதிர்காலத்தில் சீரியல், சினிமா என இரண்டு துறைகளிலும் பிரபலமான நடிகையாகி விடுவேன் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது என்கிறார் திவ்யா.