ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை நமீதா, சென்னை நுங்கம்பாக்கத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்த வீட்டின் உரிமையாளர் கருப்பையா நாகேந்திரனுக்கும், நமீதாவுக்கும் வாடகை தொடர்பாக பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நுங்கம்பாக்கம் போலீசில் நமீதா புகார் செய்தார். நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாததால், சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் ஒரு அவசர வழக்கை தாக்கல் செய்தார். அதில் தான் நியாமான வீட்டு வாடகை செலுத்தி வருவதாகவும், ரவுடிகளை பயன்படுத்தி, என்னை வீட்டில் இருந்து வெளியேற்ற முயற்சிக்கிறார். எனவே வீட்டின் உரிமையாளர் தன்னை வீட்டில் இருந்து காலி செய்ய தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த வழக்கு இன்று(ஜன., 4-ம் தேதி) விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, நமீதாவை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யக்கூடாது, வாடகை வீட்டில் இருக்கும் நமீதாவை, வீட்டின் உரிமையாளர் காலி செய்வதற்கு தடை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.