தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
'புலி முருகன்' பட இயக்குனரான வைசாக் இனி வரும் நாட்களில் பெரிய நடிகர்களின் நான்கு படங்களை அடுத்தடுத்து இயக்கவுள்ளதாக புத்தாண்டு தினத்தில் அறிவித்தார்.. அதில் மம்முட்டியும் பிருத்விராஜும் இணைந்து நடித்த, வைசாக் இயக்கத்தில் வெளியான 'போக்கிரி ராஜா' படத்தின் இரண்டாம் பாகமான 'ராஜா-2'வும் ஒன்று.. முதல் பாகத்தில் மம்முட்டிக்கு ஜோடி எதுவும் கிடையாது. பிருத்விராஜுக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்திருந்தார்.. 'புலி முருகன்' படத்தை தயாரித்த தோமிச்சன் முளகுபாடம் தான் அந்தப்படத்தை தயாரித்திருந்தார்..
தற்போது 'ராஜா-2' படத்தையும் இவர்தான் தயாரிக்க இருக்கிறார். 'ராஜா-2'வில் மம்முட்டியே நடிக்கவுள்ளதாக இயக்குனர் கூறிவிட்ட நிலையில் முதல் பாகத்தில் மம்முட்டியின் தம்பியாக நடித்த பிருத்விராஜும் அவரது காதலியாக நடித்த ஸ்ரேயாவும் இந்தப்படத்தில் நடிப்பார்களா என்கிற கேள்வியும் ரசிகர்களிடம் எழுந்துள்ளது. இதுபற்றி தயாரிப்பாளரிடம் கேட்கப்பட்டதற்கு, படம் இப்போது ஆரம்ப நிலையில்தான் உள்ளது என்பதால் அதுபற்றி எதுவும் கூற இயலாது என நழுவியுள்ளார். அதுமட்டுமல்ல, இது போக்கிரி ராஜாவின் இரண்டாம் பாகம் தான் என்றாலும், மம்முட்டியின் இன்னொரு பயணத்தில் அவர் எதிர்கொள்ளும் நிகழ்வுகளை மையப்படுத்திய கதை என்றும், இதில் முதல் பாகத்தில் இல்லாத பல புதிய நடிகர்கள் இடம் பெறுவார்கள் என்றும் கூறியுள்ளார் தயாரிப்பாளர் தோமிச்சன் முளகுபாடம்.