தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
உதயம், சகுனி, மாஸ் ஆகிய படங்களில் நடித்தவர் கன்னட நடிகை பிரணிதா. கார்த்தியுடன் சகுனி படத்தில் நடித்தபோது அடுத்து தமிழில் முன்னணி நடி கையாக விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர். அதோடு, அந்த படத்தில் நடித்து வந்தபோதே பிரணிதாவிடம் சில கம்பெனிகள் கால்சீட் பேசி வந்தன. ஆனால் சகுனி படம் அதிர்ச்சி தோல்வி கொடுத்ததை அடுத்து யாரும் அவரை கண்டு கொள்ளவில்லை. இதனால் பெரிய ஏமாற்றத்துடன் பெங்களூருக்கு திரும்பினார் பிரணிதா.
இருப்பினும், தமிழில் சாதிக்க வேண்டும் என்கிற ஆர்வம் அவருக்கு இருந்ததால் தொடர்ந்து தமிழ்ப்படங்களுக்கு கல்லெறிந்து வந்த பிரணிதா, தற்போது ஜெய்க்கு ஜோடியாக எனக்கு வாய்த்த அடிமைகள் மற்றும் அதர்வாவுடன் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் எனக்கு வாய்த்த அடிமைகள் படத்தில் ஜெய்யை காதலிப்பது போல் நடித்து ஏமாற்றும் வேடத்தில் நடித்துள்ளார் பிரணிதா. அந்த வகையில், சில காட்சிகளில் அவர் வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி ஸ்கோர் பண்ணியுள்ளாராம்.
ஆனால் இந்த கேரக்டரில் நடிக்க சில முன்னணி நடிகைகளிடம் சொன்னபோது நெகடீவ் ரோல் என்று நடிக்க மறுத்து விட்டார்களாம். ஆனால் பிரணிதாவிடம் சொன்னபோது, இந்த மாதிரி கேரக்டரில்தான் வித்தியாசமான பர்பாமென்ஸ் கொடுக்க முடியும். அதனால் நெகடீவ் ரோல் என்பதால் எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று சம்மதம் சொல்லி களமிறங்கினாராம்.