வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
கங்காரு, வந்தாமல, சாரல் உள்பட சில படங்களில் நடித்தவர் ஸ்ரீ பிரியங்கா. பாண்டிச்சேரி நடிகையான இவர், ஆரம்பத்தில் ஹோம்லியாக மட்டுமே நடிப்பேன் என்று சொன்னபோதும், இப்போது கதைகளுக்கேற்ப ஓரளவு கிளாமராக நடிப்ப தற்கும் தயாராகி விட்டார். அதோடு, விஜயசேதுபதி உள்ளிட்ட சில முன்னணி நடிகர்களுடன் நடிப்பதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளார். இந்த நேரத்தில் கங்காரு படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சி இயக்கி வரும் மிக மிக அவசரம் என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார் ஸ்ரீ பிரியங்கா. இந்த படத்தில் அவர் போலீஸ் வேடத்தில் நடித்து வருகிறார்.
இதுபற்றி ஸ்ரீ பிரியங்கா கூறுகையில், இந்த படத்தில் முதன்முறையாக நான் போலீஸ் வேடத்தில் நடிக்கிறேன். இந்த கதையை சுரேஷ் காமாட்சி சொன்னபோது பிரமிப்பாக இருந்தது. அந்த அளவுக்கு ஒரு அழுத்தமான போலீஸ் கதை. அப்போது, விஜயசாந்தி உள்ளிட்ட சில ஆக்சன் ஹீரோயினிகள்தான் என் மனக்கண்ணில் வந்தார்கள். இந்த அளவுக்கு வெயிட்டான ரோலில் நடிக்க முடியுமா? என்றொரு சிறிய பயம் இருந்தபோதும், இதை ஒரு சவாலாக ஏற்று நடிப்போம் என்று முடிவு செய்து நடித்து வருகிறேன்.
மேலும், இந்த படத்திற்காக முதல்நாள் காக்கி சட்டை அணிந்தபோது என்னையுமறியாமல் ஒருவித தைரியம், கம்பீரம் வந்தது. அதனால் இந்த படம் மூலம் கோலிவுட்டில் அதிரடி நடிகை என்கிற இடத்தை பிடித்து விட முடியும் என்கிற தன்னம்பிக்கையும் எனக்கு ஏற்பட்டது. இந்த மிக மிக அவசரம் படம் திரைக்கு வரும்போது, தமிழ்நாட்டு ரசிகர்கள் என்னை முழுமையாக ஏற்றுக்கொள்வார்கள் என்று உறுதியாக நம்புகிறேன் என்கிறார் ஸ்ரீ பிரியங்கா.