தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் படத்தில் நடித்து பிரபலமானவர் முருகதாஸ். அதன்பிறகு காமெடி மற்றும் குணசித்ர வேடங்களில் நடித்து வரும் அவர், விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான சைத்தான் படத்தில் அவரது நண்பராக நடித்திருந்தார். அதையடுத்து ஆர்யா நடித்துள்ள கடம்பன் படத்திலும் நண்பன் வேடத்தில் படம் முழுக்க ஆர்யாவுடன் வரும் காமெடியன் ரோலில் நடித்துள்ளார்.
இதுபற்றி ஆடுகளம் முருகதாஸ் கூறுகையில், நான் பல படங்களில் காமெடியனாக நடித்திருந்தபோதும், இந்த கடம்பன் படத்தில் நடித்தது திகிலான அனுபவம் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த படத்திற்காக மாதக்கணக்கில் பாங்காங் நாட்டில் முகாமிட்டு ஆர்யாவின் நண்பனாக நடித்தேன். இது யானைகள் சம்பந்தப்பட்ட படம் என்பதால், பல காட்சிகளில் யானைகளுடன் தான் நடித்தோம். முன்னபின்ன பழக்கமில்லாத ஊர் என்பதோடு, யானைகளுடன் இதுவரை நடித்ததில்லை என்பதால் மனதளவில் யானைகளுடன் நடிப்பது பயமாகவே இருந்தது. என்றாலும், யானைகள் அமைதியானவை என்பதோடு மனிதர்களுடன் நெருக்கமான பழகும் குணாதிசயம் கொண்டது என்பதால் ஓரிரு நாட்களுக்குப்பிறகு அந்த பயம் படிப்படியாக குறைந்து விட்டது.
மேலும், இந்த படத்தில் பல காட்சிகளில் 60 யானைகளுடன் ஆர்யாவுடன் இணைந்து நடித்தேன். படப்பிடிப்பு தளத்தில் எங்கு திரும்பினாலும் ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள் மாதிரி யானைகள் தான் எங்களை சுற்றி நின்றன. அந்த வகையில் கடம்பன் படத்தில் நடித்தது மறக்க முடியாத திகில் அனுபவம் என்றே சொல்ல வேண்டும். அதோடு, எத்தனையோ படங்களில் காமெடியனாக நடித்திருந்தபோதும், இந்த படத்தில் நடித்ததை என் சினிமா கேரியரில் மறக்கவே முடியாது. இந்த படம் கண்டிப்பாக தமிழ் ரசிகர்களுக்கு புதுமையான பிடித்தமான படமாக இருக்கும் என்கிறார் ஆடுகளம் முருகதாஸ்.