நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
'புலி முருகன்' என்கிற பிளாக் பஸ்டர் ஹிட்டை தொடர்ந்து மலையாள சினிமாவின் மாஸ் இயக்குனராக மாறிவிட்டார் இயக்குனர் வைசாக். அதை தொடர்ந்து, அவர் அந்த ஹீரோவை இயக்கப்போகிறார், இந்த ஹீரோவை இயக்க போகிறார் என ஆளாளுக்கு புதுப்புது செய்திகளை கிளப்பிவிட்டு வருகிறார்கள். ஒரே ஆள் ஒரே நேரத்தில் இத்தனை பேரின் படங்களை இயக்குவது சாத்தியமா என்கிற சந்தேகத்திற்கு, தனது புத்தாண்டு செய்தி மூலம் விளக்கம் அளித்து, முற்றுப்புள்ளி வைத்துள்ளார் வைசாக்.
அவரது கூற்றுப்படி மேற்கூறிய அனைத்துமே உண்மைதானாம். ஏற்கனவே மம்முட்டியை வைத்து அவர் இயக்கிய 'போக்கிரி ராஜா படத்தின் இரண்டாம் பாகமாக 'ராஜா-2' என்கிற படத்தை மீண்டும் மம்முட்டியை வைத்தே இயக்க உள்ளாராம். தவிர மோகன்லாலை வைத்து 3டியில் மல்டி ஸ்டாரர் படம் ஒன்றையும் இயக்க உள்ளாராம். அதுமட்டுமின்றி திலீப் நடிக்கும் படமும் இவரது பட்டியலில் உண்டு... இதற்கெல்லாம் ஹைலைட்டாக துல்கர் சல்மான் நடிக்கும் மாஸ் ஆக்சன் படம் ஒன்றையும் இயக்க உள்ளாராம்.
இந்தப்பட்டியலில் இருப்பவற்றில் துல்கரின் படம் இந்த வருட இறுதியில் ஆரம்பிக்கப்பட இருக்கிறதாம். மற்ற ஹீரோக்கள் ஏற்கனவே வைசாக்கின் டைரக்சனில் நடித்தவர்கள் தான் என்பதால் அவர்களின் வசதிக்கேற்றபடி ஒவ்வொரு படங்களாக இயக்க உள்ளாராம் வைசாக். இவர்கள் தவிர மற்ற ஹீரோக்கள் வைசாக்கின் படங்களில் நடிக்க விரும்பினால் குறைந்தது இன்னும் மூன்று வருடங்களுக்காவது காத்திருக்கத்தான் வேண்டும்.