'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ரஜினியின் மூத்த மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் '3' படத்தின் மூலம் இயக்குநரானார். '3' படத்திற்குப் பிறகு னௌதம் கார்த்திக்கை வைத்து 'வை ராஜா வை' என்ற படத்தை இயக்கினார். இந்தப் படம் படு தோல்வியடைந்ததை அடுத்து படம் இயக்குவதை தற்காலிகமாக ஒத்தி வைத்திருந்தார். அதே நேரம் சினிமா ஸ்டன்ட் கலைஞர்களின் வாழ்க்கை பற்றிய 'சினிமா வீரன்' என்ற டாக்குமென்ட்ரி படத்தை உருவாக்கி வந்தார்.
இந்நிலையில் தற்போது, அவர் இயக்கவிருக்கும் புதிய படம் ஒன்றின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த வருடம் நடந்த ரியோ டி ஜெனிரோவில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான 'பாராலிம்பிக்' போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்றவர் தமிழ்நாட்டை சேர்ந்த தங்கவேலு மாரியப்பன். இவருடைய வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து பயோபிக் என்ற ஸ்போர்ட்ஸ் படம் ஒன்றை இயக்குகிறார் ஐஸ்வர்யா தனுஷ். அந்தப் படத்துக்கு 'மாரியப்பன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இப்படத்திற்கான வசனங்களை குக்கூ, ஜோக்கர் புகழ் ராஜு முருகன் எழுதுகிறார்.
தமிழ், ஆங்கிலம் என ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் உருவாகிறது. ஐஸ்வர்யா தனுஷ் திடீரென மாரியப்பன் கதையை படமாக எடுப்பது ஏன்? எல்லாம் காரணமாகத்தான். சமீபகாலமாக பாலிவுட்டில் விளையாட்டு சம்பந்தமான பயோபிக் படங்கள் ஹிட்டாகி வருகின்றன. அதிலும் கடந்தவாரம் வெளியான அமீர்கான் நடித்த ஸ்போர்ட் படமான தங்கல் சூப்பர்ஹிட்டாகி பல கோடி வசூலித்திருக்கிறது. அந்த இன்ஸ்பரேஸனால் இப்போது மாரியப்பன் வாழ்க்கையை படமாக எடுக்க முடிவெடுத்திருக்கிறார் ஐஸ்வர்யா என்கிறார்கள்.