இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
விஜய்சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ருஷ்டி டாங்கே நடிக்க, சீனுராமசாமி இயக்கத்தில் வெளியான படம் - 'தர்மதுரை'. இதன் 100-வது நாள் வெற்றிவிழா, சென்னையில் உள்ள கமலா தியேட்டரில் கொண்டாடப்பட்டது. ஸ்டுடியோ-9 நிறுவனம் சார்பில் ஆர்.கே.சுரேஷ் தயாரித்த இப்படத்தின் 100-வது நாள் விழாவில், அந்தப் படத்தில் நடித்த நடிகர் நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் விநியோகஸ்தர்களும் பங்குபெற்றனர். ஆனால் தர்மதுரை படத்தின் கதாநாயகியான தமன்னா மட்டும் 100-வது நாள் விழாவுக்கு வரவில்லை.
என்ன காரணம் என்று தர்மதுரை படக்குழுவினரிடம் கேட்டபோது கடந்த காலத்தில் நடைபெற்ற கசப்பான சம்பவங்கள் தான் காரணம் என்கின்றனர். தர்மதுரை படத்தில் நடித்தபோது கால்ஷீட் சொதப்பினாராம் தமன்னா. படப்பிடிப்புக்கு வராமல் டிமிக்கி கொடுத்ததால் தமன்னா மீது கடுப்பாகிவிட்டார் தர்மதுரை தயாரிப்பாளர்கள். அதன் பிறகு படம் வெளியான நேரத்தில் புரமோஷனுக்கு தமன்னாவை அழைத்தாராம் தயாரிப்பாளர். அப்போதும் அலட்சியப்படுத்தினாராம் தமன்னா. எனவே தயாரிப்பாளர்கள் சங்கத்திலும், நடிகர் சங்கத்திலும் தமன்னா மீது புகார் கொடுத்தார் அப்படத்தின் தயாரிப்பாளர். அதை மறக்காத தமன்னா அந்த கடுப்பில்தான் தர்மதுரை விழாவுக்கு வரவில்லை என்று கோலிவுட்டில் பேசிக்கொள்கிறார்கள்.