டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
2017ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்கள் டிசம்பர் 31ம் தேதி இரவு பல நாடுகளில் அமோகமாகக் கொண்டாடப்பட்டது. நமது திரையுலக நட்சத்திரங்கள் பலரும் பல நாடுகளில் புத்தாண்டைக் கொண்டாடியிருக்கிறார்கள். நடிகர்கள் சூர்யா, மாதவன் இருவரும் தங்களது குடும்பத்தினருடன் துபாயில் புத்தாண்டைக் கொண்டாடியிருக்கிறார்கள்.
நேற்று காலை இது பற்றிய ஒரு பதிவை புகைப்படத்துடன் தன்னுடைய டிவிட்டரில் மாதவன் வெளியிட்டுள்ளார். அதில் மாதவன் அவருடைய மனைவி சரிதா, சூர்யா, அவருடைய மனைவி ஜோதிகா ஆகியோர் இடம் பெற்றுள்ளார்கள். துபாயில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் அவர்கள் புத்தாண்டைக் கொண்டாடியிருக்கிறார்கள். “நெருங்கிய நண்பர்கள், உறவினர்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்,” என மாதவன் குறிப்பிட, அதற்கு சூர்யா, “இந்த பந்தம் மிகவும் சிறப்பானது, நீங்கள் செய்வதற்கெல்லாம் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது,” என பதிலளித்துள்ளார்.
சூர்யா, ஜோதிகா சம்பந்தப்பட்ட தனிப்பட்ட புகைப்படங்கள் இதுவரை அதிகமாக வெளியில் வந்ததில்லை. முதல் முறையாக அவர்கள் இருவரும் மாதவன் குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாடுவதை மாதவனே வெளியிட்டுள்ளார்.