அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |
தமிழ்ப்படங்களில் அதிகமான பாடல்களை எழுதி வந்தவர் பா.விஜய். அதோடு ஆட்டோகிராப் என்ற படத்தில், ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ் வென்றால் போராடும் போர்க்களமே -என்ற பாடலுக்கு தேசிய விருது பெற்றார். பின்னர் சுரேஷ்கிருஷ்ணா இயக்கிய இளைஞன் படத்தில் ஹீரோ அவதாரம் எடுத்தார். அதன்பிறகும் சில படங்களில் நடித்தவருக்கு எதிர்பார்த்தபடி வெற்றி கிடைக்கவில்லை. இருப்பினும் தொடர் முயற்சி காரணமாக பின்னர் நையப் புடை, ஸ்ட்ராபெர்ரி ஆகிய படங்களில் நடித்தார். இதில் ஸ்ட்ராபெர்ரி ஓரளவு வெற்றி பெற்றது.
அதையடுத்து தற்போது ஒரு கிரைம் திரில்லர் கதையில் நடித்துக்கொண்டிருக்கிறார் பா.விஜய். இந்த படத்திற்கு ஆருத்ரா என்ற பெயர் வைத்துள்ளனர். முந்தைய படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கெட்டப்பில் இந்த படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் பா.விஜய், சண்டை காட்சிகளில் அதிரடியான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறாராம். மேலும், இதற்கு முன்பு அவர் நடித்துள்ள ஸ்ட்ராபெர்ரி படம் போன்று ஒரு சமூக களையெடுக்கும் கதையில் இந்த படம் தயாராகிறதாம்.