பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் |
பிரபுசாலமன் இயக்கிய மைனா படத்தில் நடித்து பிரபலமானவர் அமலாபால். அதன்பிறகு அவரது கும்கியில் நடித்து பிரபலமானவர் லட்சுமிமேனன். அதனால் அதன்பிறகு அவரது கயல் படத்தில் ஆனந்தி நடித்தபோது, இவரும் அமலாபால், லட்சுமி மேனனைப்போன்று ஒரே படத்தில் முன்னணி நடிகையாகி விடு வார் என்றுதான் கருதப்பட்டது. அதோடு கயல் என்கிற டைட்டில் வேடத்திலேயே நடித்ததால் அவர் மீது அதிகப்படியான எதிர்பார்ப்புகள் இருந்தது. ஆனால் அவற்றை பூர்த்தி செய்யும் வகையில் ஆனந்தி நடித்தபோதும் அந்த படம் பெரிதாக வெற்றி பெறவில்லை.
இருப்பினும், அதர்வா, ஜி.வி.பிரகாஷ் போன்ற நடிகர்களுடன் சண்டிவீரன், திரிஷா இல்லன்னா நயன்தாரா, எனக்கு இன்னொரு பேர் இருக்கு போன்ற படங்களில் நடித்தவர், தற்போது புருஸ்லீ, மன்னர் வகையறா உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். சில படங்களில் இரண்டு ஹீரோயினி கதைகளிலும் நடிக்கிறார். இதனால் போதுமான படவாய்ப்புகள் இல்லாததால்தான் டபுள் ஹீரோயினி கதைகளை ஆனந்தி ஓகே பண்ணி வருவதாக சொல்கிறார்கள்.
ஆனால் இதுபற்றி ஆனந்தி கூறுகையில், எப்படியாவது நடித்து பெரிய நடிகை யாக வேண்டும் என்கிற ஆசையெல்லாம் எனக்கு இல்லை. குறைவான படங்களில் நடித்தாலும் பேர் சொல்லும் வேடங்களில் நடிக்கவே ஆசைப்படுகிறேன். அந்த வகையில், இரண்டு நாயகி படம் என்கிறபோது நான் நடிக்கிற கதாபாத்திரத்துக்கு கதையில் முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்கிறேன். அப்படி இல்லாதபட்சத்தில் எந்த படத்தை நான் ஓகே செய்வதில்லை. நான் இதுவரை நடித்துள்ள படங்களை பார்த்தாலே அது புரியும். அதே மாதிரிதான் இப்போதும் கதைக்கு முக்கியத்துவமுள்ள கதாநாயகியாகவே நடித்து வருகிறேன். மேலும், எனக்குரிய கேரக்டர் முக்கியமானதாக இருக்கும்போது எதற்காக இன்னொரு நாயகி படத்தில் இருப்பதைப்பற்றி நான் கவலைப்பட வேண்டும் என்கிறார் கயல் ஆனந்தி.