பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்த போது, சார்ந்தோருக்கு ஆழ்ந்த இரங்கல் எனக்கூறி சலசலப்பை ஏற்படுத்திய நடிகர் கமல், சசிகலா கட்சிக்கு தலைமையேற்றுள்ள நிலையில், களம் புகுந்தோர் களமறியார் என பதிவிட்டுள்ளது, மறைமுக எதிர்ப்பை தெரிவிப்பதாக உள்ளது.
முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்த போது, ரஜினி உள்ளிட்ட திரையுலக நட்சத்திரங்கள் அனைவரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். வெளிநாட்டில் இருந்த அஜித் தாமதமாக வந்தாலும், ஜெ., நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தினார். ஆனால், நடிகர் கமலோ, சார்ந்தோருக்கு ஆழ்ந்த இரங்கல் என்பதை மட்டும் டுவிட்டரில் பதிவிட்டார்; அவரது இந்த கருத்து சலசலப்பை உருவாக்கியது.
இந்நிலையில், அ.தி.மு.க.,வின் பொதுச் செயலராக சசிகலா நேற்று பொறுப்பேற்றார். இந்த தருணத்தில், களம் புகுந்தோர் களமறியார்; களமறிந்தோர் களமிறங்கார்; களமிறங்கார் கோழையலர்; களத்திரந்தோர் வீரரலர்; பிறந்தழிதல் பிழையுமல, நிறையுமல என, நடிகர் கமல், தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்து, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது, களம் இறங்கியோர் அனுபவம் இல்லாதவர்கள்; அனுபவமிக்கவர் களமிறங்கவில்லை. களத்தில் இறங்காதோர் கோழையல்ல; களத்தில் உள்ளோர் வீரரும் அல்ல. பிறந்து, இறந்தவர்களால், பிழையும் இல்லை; நிறையும் இல்லை என, கமல் கூறிய கருத்து, களம் இறங்கியோருக்கு மறைமுக எச்சரிக்கையாக இருப்பதாக கூறப்படுகிறது.