மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பாலிவுட்டையும் தாண்டி ஹாலிவுட்டிலும் பிரபலமாகிவிட்ட நடிகை பிரியங்கா சோப்ரா, இந்தாண்டு புத்தாண்டை கோவாவில் தனது நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் கொண்டாட தயாராகிவிட்டார். அவரிடத்தில் புத்தாண்டிற்கு என்ன தீர்மானம் எடுத்துள்ளீர்கள் என்று கேட்டபோது, அவர் கூறியதாவது... ‛‛பொதுவாக நான் புத்தாண்டிற்கு எந்த தீர்மானமும் எடுப்பதில்லை, ஏனென்றால் இரண்டு நாளிலேயே அதை மறந்து விடுவேன். ஆனால் இந்தாண்டு உடல்நலத்தை பேணி காப்பது தொடர்பாக தீர்மானம் எடுக்க உள்ளேன். தற்போது, எனது உடல்நிலையில் அதிக கவனம் செலுத்தலாம் என்று உள்ளேன். உடல் எடை அதிகரிக்க தொடங்குகிறது, எனவே உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு போன்றவைகளை மேற்கொள்ள உள்ளேன். அதேப்போன்று காபி பருகுவதை நிறுத்த உள்ளேன், இவைகள் தான் இந்தாண்டில் நான் மேற்கொள்ள தீர்மானம். கண்டிப்பாக நான் இதையெல்லாம் செய்ய மாட்டேன் என்று தெரியும், இருந்தாலும் அதற்கான முயற்சியை மேற்கொள்வேன்'' என்று கூறியுள்ளார்.