தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தியேட்டரில் சென்று மட்டுமே படம் பார்க்க வேண்டும் என்கிற நிலை மாறி 15 வருடங்கள் ஆகிவிட்டது. தொலைக்காட்சியில் தொடங்கி செல்போன் வரை எதில் வேண்டுமானாலும் சினிமா பார்க்கலாம் என்கிற நிலை. மக்கள் தியேட்டருக்கு செல்வதை குறைத்து விட்டனர், இதனால் 40 சதவிகித தியேட்டர்கள் இடிக்கப்பட்டு திருமண மண்டபங்களாகவும், வணிக வளாகங்களாவும் மாறிவிட்டன.
தியேட்டர் கட்டணம் 120 ரூபாய், பார்க்கிங் கட்டணம் 40 ரூபாய், இடைவேளை நொறுக்கு தீனிகளுக்கு 100 ருபாய் என ஒருவர் சினிமா பார்க்க 260 ரூபாய் செலவு செய்ய வேண்டும். அதே படத்தை பர்மா பஜாரில் 30 ரூபாய்க்கு சிடி வாங்கி வீட்டில் உட்கார்ந்து அனைவரும் பார்த்து விடுகிறார்கள்.
இந்த நிலையை மாற்ற சிலர் அவ்வப்போது சில திட்டங்களை முன் வைப்பார்கள். இதுவரை அப்படி முன்வைக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் தோல்வியில்தான் முடிந்திருக்கிறது. கடைசியாக சேரன் சி2எச் என்ற திட்டத்தின் மூலம் சினிமாவை முறையாக ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு செல்ல திட்டமிட்டார். அதுவும் தோல்வியில் முடிந்தது.
தற்போது நெக்ஸ்ட் லெவல் சினிமா என்ற அமைப்பு ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதுபற்றி இதன் அமைப்பாளரும் மதுரை டூ தேனி படத்தின் இயக்குனருமான எஸ்.பி.எஸ்.குகன் கூறியதாவது:
இந்த திட்டத்தின் மூலம் ஒருவர் 499 ரூபாய் கொடுத்து நெக்ஸ்ட் லெவல் சினிமா நிறுவனத்தின் ஸ்மார்ட் கார்டை வாங்க வேண்டும். நெக்ஸ் லெவல் சினிமா வாங்கி வெளியிடும் முதல் 13 திரைப்படத்தை இலவசமாக பார்க்கலாம். அதன் பிறகு ஒவ்வொரு படத்திற்கும் 19 ரூபாய் கட்டணம் செலுத்தி பார்க்கலாம். இந்த ஸ்மார்ட் கார்டை 5 வருடங்கள் பயன்படுத்தலாம். அதன் பிறகு அதனை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இந்த திட்டத்தை முதல் கட்டமாக மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம, சிவகங்கை மாவட்டங்ளில் செயல்படுத்த இருக்கிறோம். அதன்பிறகு படிப்படியாக மற்ற மாவட்டங்களுக்கு விரிவுப்படுத்துவோம். இந்த திட்டத்தின் முதல் படமாக மதுரை டூ தேனி இருக்கும். என்றார்.