இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பு நிறுவனமும், பழம்பெரும் நிறுவனமான சத்யா மூவிஸ், தங்களது 50 வருட திரையுலக வாழ்க்கையை கொண்டாடும் விதமாக தங்கள் தயாரிப்பில் வெளிவந்து ரஜினியின் மறக்க முடியாத படங்களில் ஒன்றான பாட்ஷா படத்தை நவீன தொழில் நுட்பத்தில் மெருகேற்றி அதை மீண்டும் வெளியிட இருக்கிறது. 5.1 ஒலி அமைப்புகளும், ஏனைய நவீன தொழில்நுட்ப வேலைப்பாடுகளுடன், டிஜிட்டல் பதிப்பில் பாட்ஷா படம் வெளியாக உள்ளது.
பாட்ஷா படத்தை நவீன தொழில்நுட்பத்தில் வெளியிடும் ஆர்எம்.வீரப்பனின் மகன் தங்கராஜ், சிலதினங்களுக்கு முன்னர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து அவரிடம் பாட்ஷா, டிஜிட்டல் பற்றி விளக்கி கூறினார். இதுகுறித்து தங்கராஜ் கூறியிருப்பதாவது...
"டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மெருகேறி இருக்கும் பாட்ஷா படத்தின் டிரைலர், ரஜினி சாரை வெகுவாக கவர்ந்து விட்டது. இந்த முயற்சிக்கு பின்னால் ஆர்எம்.வீரப்பன் சாரின் மகனாகிய என்னுடைய பங்கு இருக்கிறது என்பதை அறிந்து கொண்டார். தொழில் நுட்ப ரீதியாக என்னவெல்லாம் செய்ய பட்டிருக்கிறது என்பதை விரிவாக ரஜினி சாருக்கு விளக்கினேன். மேலும் படத்தின் பின்னணி இசையை முழுவதுமாக தேவா சார் புதுப்பித்து இருக்கும் விதத்தை கேள்விப்பட்டதும் மகிழ்ச்சி அடைந்தார்.
இந்த டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் உருவாகி இருக்கும் பாட்ஷா படத்தை எவ்வாறு ரசிகர்களிடத்தில் முழுமையாக கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்கின்ற யோசனைகளை எங்களோடு பகிர்ந்து கொண்டார். படம் வெளியீட்டு திட்டங்களை பற்றியும், வெளியாகும் தேதி பற்றிய விவரங்களையும் கேட்டறிந்த ரஜினி, நாங்கள் ஏற்பாடு செய்திருக்கும் பிரம்மாண்ட பிரத்யேக காட்சி மற்றும் நன்கொடைக்காக லண்டனில் ஒளிபரப்படும் சிறப்பு காட்சி பற்றியும், ஜப்பான் ரசிகர்களின் வருகையை பற்றியும் தெரியப்படுத்தினோம். நாங்கள் எடுத்த முயற்சிகளுக்கு உறுதுணையாய் இருந்து, படம் வெற்றி பெற அவருடைய ஆசீர்வாதங்களையும், வாழ்த்துக்களையும் எங்களுக்கு வழங்கினார்''.
இவ்வாறு தங்கராஜ் கூறினார்.