ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
நயன்தாரா இப்போது சோலோ ஹீரோயின் சப்ஜெக்டுகளில் நடித்து வருகிறார். யாருக்கும் ஜோடியாக இல்லாம் தனித்து தெரிகிற கதையாக தேர்வு செய்து நடிக்கிறார். அறம், டோரா ஆகிய படங்கள் அப்படிப்பட்டவைகள். இந்த வரிசையில் அவர் அடுத்து நடிக்கும் படமும் ஹீரோயின் சப்ஜெக்ட் கதை. அதனை இயக்குபவர் மிஷ்கின் உதவியாளர் பரத் கிருஷ்ணமாச்சாரி.இயக்குனர் மிஷ்கினிடம் சவுண்ட் டிசைனராகவும், உதவி இயக்குனருமாக இருந்த பரத் இப்போது நயன்தாராவிடம் கதை சொல்லி ஓகே வாங்கிவிட்டு உற்சாகமாக இருக்கிறார். இதுகுறித்து பரத் கூறியதாவது:
இயக்குனர் ஆகும் ஆசையில்தான் சினிமாவுக்கு வந்தேன். சினிமா தொழில்நுட்பம் ஒன்றை கற்றுக் கொண்டு உள்ளே நுழைவது எளிது என்ற தெரிந்து சவுண்ட் என்ஜினீயரிங் கற்றேன். பின்பு மிஷ்கின் சாரிடம் உதவியாளரானேன். நயன்தாராவை மனதில் வைத்து ஒரு கதை உருவாக்கினேன். நயன்தாரா அவ்வளவு சீக்கிரம் கதை கேட்க மாட்டார். கேட்டு பிடித்து விட்டால் முழு அர்ப்பணிப்போடு நடிப்பார் என்றார்கள். அவரை சந்திக்கும் சந்தர்ப்பம் ஒரு வழியில் கிடைத்தது. அவரிடம் நான் உங்களை 12 வருடங்களாக கவனித்து வருகிறேன். உங்கள் அசைவு, மேனரிசம் எப்படி இருக்கும் என்பதை கவனித்து அதற்கேற்ப கேரக்டரை உருவாக்கி இருக்கிறறேன் என்கிற முன்னுரையோடு கதை சொன்னேன். கதை உடனே பிடித்து விட்டது. கையில் இருக்கும் படத்தை முடித்து கொடுத்து விட்டு இந்தப் படத்தை பண்ணுவோம் என்ற கூறியிருக்கிறார்.