இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கடந்த 12 ஆண்டுகளாக அதிமுக.,வில் இருந்து வந்த நடிகர் ஆனந்த்ராஜ், ஜெயலலிதாவின் மறைவால் அக்கட்சியை விட்டு விலகுவதாக கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் ஆனந்த்ராஜ். இவர் கடந்த 2004--ம் ஆண்டு அதிமுக., கட்சியில் இணைந்தார். அப்போது முதல் அதிமுக.,வின் நட்சத்திர தொகுப்பாளராக இருந்து வந்தார். தேர்தல் பிரசாரங்களில் போது இவரும் ஊர் ஊராக சென்று அதிமுக.,வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். சமீபத்தில் ஜெயலலிதா மரணம் அடைந்தார். அப்போது முதலே அதிர்ச்சியிலும், அதிருப்தியிலும் இருந்தார் ஆனந்த்ராஜ். மேலும் ஜெயலலிதாவை தவிர வேறு யாரையும் தான் தலைவராக ஏற்று கொள்ள முடியாது என்று கூறி வந்தார்.
இந்நிலையில் அதிமுக., கட்சியிலிருந்து தான் விலகுவதாக ஆனந்த்ராஜ் அறிவித்துள்ளார். இதுப்பற்றி அதிமுக., தலைமை கழகத்திற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது.... ‛‛ஆனந்த்ராஜ் ஆகிய நான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் கட்சியில் சேர்க்கப்பட்டேன். கழகத்தில் உறுப்பினராக சேர்ந்ததிலிருந்து இப்போது வரை கழக கட்டுப்பாட்டையும் கண்ணியத்தையும் மீறாமல் இந்தக்கட்சிக்காக உழைத்து வந்தேன். ஜெயலலிதாவின் இழப்பு என் மனதில் பெரிய காயத்தை ஏற்படுத்தி விட்டது. அதை யாராலும் ஈடு செய்ய முடியாது என்ற வலியின் காரணமாக கட்சியிலிருந்து விலக முடிவு செய்துள்ளேன். இத்தனை காலம் எனக்கு ஒத்துழைப்பு அளித்த அனைத்து கழக தொண்டர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆனந்த்ராஜ், ‛‛ஜெயலலிதாவுக்கு மதிப்பளிக்க வேண்டும். அவருடன் ஒப்பிட்டு வேறு யாரையும் பேச வேண்டாம். மூத்த தலைவர்கள் செங்கோட்டயன் பொன்னையன் பேச்சு வருத்தம் அளிக்கிறது. இப்போதும் மக்கள் முதல்வர் ஜெயலலிதா தான். வாய்ப்பு கிடைத்தால் திமுக தலைவர் கருணாநிதியை சந்திப்பேன்'' என்றார்.