டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கடந்த வருடம் ஆறு படங்களில் நடித்த ஜெயசூர்யாவுக்கு இரண்டு ஹிட்டுகளும் இரண்டு ஆவரேஜ் வெற்றிகளும், இரண்டு பிளாப்களும் பரிசாக கிடைத்தன. இந்தவருடம் ஜெயசூர்வின் திரையுலக பயணம் எப்படி அமைந்துள்ளது..?
இந்த வருடத்தில் மொத்தம் ஐந்து படங்களில் நடித்துள்ளார் ஜெயசூர்யா. இதில் நான்கு படங்கள் ரிலீசாகி விட்டன, ஐந்தாவது படமான 'பக்ரி' கிறிஸ்துமஸ் ரிலீஸாக வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு, தியேட்டர் அதிபர்கள்-தயாரிப்பாளர்கள் பிரச்னையில் மாட்டிக்கொண்டதால் இந்த வருடம் வெளியாகிறது என்றே தெரிகிறது. மற்ற நான்கு படங்களில் இந்த வருட ஆரம்பத்தில் வெளியான ஸ்கூல் பஸ் மற்றும் ஷாஜகானும் பரீக்குட்டியும் ஆகிய படங்களில், குஞ்சாக்கோ போபனுடன் இணைந்து நடித்திருந்தார். 'ஷாஜகானும் பரீக்குட்டியும்' படம் ஜாலியாக போனது என்கிற பேச்சு பரவியதே தவிர பெரிய அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. 'ஸ்கூல் பஸ்' படத்தில் ஜெயசூர்யாவுக்கு பெரிய வேலை ஒன்றும் இல்லை.
அடுத்ததாக மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட படம் ஜெயசூர்யா போலீஸ் அதிகாரியாக நடித்த 'இன்ஸ்பெக்டர் தாவூத் இப்ராஹீம்'. பலவீனமான கதை மற்றும் திரைக்கதையில் வந்த ஜோரில் பெட்டிக்குள் சுருண்டது. அடுத்ததாக வெளியான 'பிரேதம்' படம் ஹாரர் காமெடி வகையை சேர்ந்தது. இது ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஓரளவு தீனி போட்டதால் வெற்றிக்கோட்டை தொட்டது. கிறிஸ்துமஸ் வெளியீடாக சித்திக் இயக்கத்தில் ஜெயசூர்யா நடித்த 'பக்ரி' படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் இருந்தாலும் இனி தியேட்டர் அதிபர்கள்-தயாரிப்பாளர்கள் பிரச்சனை முடிந்தபின்னர் தான் வெளியாகும் என்றே தெரிகிறது.