தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இன்றைய தேதியில் இந்தியா முழுக்க பரபரப்பாக பேசப்பட்டு வருபவர் பாலிவுட் நடிகர் அமீர்கான்தான். ஒரு கலைஞன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக மட்டுமல்ல, இந்தியாவின் மிகப்பெரிய திரையுலக ஆளுமையாகவும் இருக்கிறார்.
இந்திய சினிமாவை சர்வதேச அளவில் கொண்டு செல்லும் மாபெரும் கலைஞன். அப்படிப்பட்ட அமீர்கான், தன்னுடைய கடுமையான உழைப்பினால் உருவாக்கியுள்ள படம் - 'தங்கல்'. அண்மையில் சென்னை வந்த அமீர்கான் ரஜினி, தனுஷ் உட்பட அவரின் குடும்பத்தாருக்கு 'தங்கல்' படத்தை திரையிட்டுக் காட்டினார்.
தங்கல் படத்தைப் பார்த்துவிட்டு அமீர்கானை வெகுவாகப் பாராட்டியுள்ளார் ரஜினி.
உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைக்கதையில் அவரின் நடிப்பு சிறப்பாக இருந்ததையும், கேரக்டருக்காக மெனக்கெட்டிருப்பதை குறிப்பிட்டுப் பாராட்டினாராம். ரஜினியின் பாராட்டில் மகிழ்ச்சியடைந்த அமீர்கான், 'தங்கல்' படத்தின் தமிழ் டப்பிங்கிற்காக, பின்னணிக் குரல் கொடுக்க வேண்டும் என்று ரஜினியிடம் ஒரு வேண்டுகோளையும் வைத்தார்.
தங்கல் தமிழ் டப்பிங்கில் ரஜினி டப்பிங் பேசியிருந்தால் படத்திற்கு கூடுதல் கொஞ்சம் பப்ளிசிட்டி கிடைக்கும் என்று அமீர்கான் எதிர்பார்த்தார். ஆனால் அமீர்கானின் வேண்டுகோளை அன்போடு மறுத்துவிட்டார் ரஜினி. இருந்தபோதும் தங்கல் படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. ஹிந்தி மட்டுமல்லாது தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் அமீர்கான் உள்ளிட்ட படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.