ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
எங்கேயும் எப்போதும் படத்தில் இசையமைப்பாளரானவர் சத்யா. அதன்பிறகு தீயா வேலை செய்யனும் குமாரு, நெடுஞ்சாலை, இவன் வேற மாதிரி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் உள்பட பல படங்களுக்கு இசையமைத்த அவர், தற்போது பார்த்திபன் இயக்கியுள்ள கோடிட்ட இடங்களை நிரப்புக படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் அவரது பின்னணி இசையைக்கேட்ட பார்த்திபன், வெகுவாக பாராட்டினாராம்.
இதுபற்றி இசையமைப்பாளர் சத்யா கூறுகையில், கோடிட்ட இடங்களை நிரப்புக படம் பின்னணி இசைக்கு முக்கியத்துவமுள்ள படம். அதனால் ஒவ்வொரு காட்சிகளையும் உணர்ந்து உள்வாங்கி அதற்கு தேவையான இசைக்கருவிகளை சரியாக பயன்படுத்தி பின்னணி இசையமைத்துள்ளேன். குறிப்பாக, கீப்போர்டு போன்று இருக்கும் ஒரு புதுமையான இசைக்கருவியை இந்த படத்தில் பல இடங்களில் பயன்படுத்தியிருக்கிறேன். அந்த கருவியை ஒரு பாடல் காட்சியில் வாயினால் ஊதுவது போன்று சாந்தனு நடித்திருப்பார். அது பார்ப்பதற்கு கீப் போர்டு போலவே இருக்கும்.
மேலும், கதாநாயகி கதகளி டான்ஸ் ஆடும்போது அதற்கு ஒரு வித்தியாசமான பின்னணி இசையை கொடுத்துள்ளேன். அதைக்கேட்ட பார்த்திபன் சார், ரொம்ப புதுமையாக இருப்பதாக சொல்லி என்னை பாராட்டினார். அவரது பாராட்டு எனக்கு பெரிய உற்சாகத்தை கொடுத்தது. பார்த்திபனின் இதற்கு முன்பு இயக்கிய கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்திற்கும் நான்தான் பின்னணி இசையமைத்திருந்தேன் என்பது குறிப்பிடத்தக்கது.
அதோடு, இந்த படத்தில் ஒவ்வொரு பாடல்களுமே ஒவ்வொரு விதமாக இருக்கும். அதிலும் டி.ராஜேந்தர் சார் பாடிய டுமுக்காத்தான் பாடல் பெரிய அளவில் ரீச் ஆகும் என்று எதிர்பார்க்கிறேன். அவர் அதிரடியாக அந்த பாடலை பாட, சாந்தனு அதற்கேற்ப அதிரடி நடனமாடியிருக்கிறார். அதனால், படம் தியேட்டருக்கு வரும்போது இளவட்ட ரசிகர்கள் இந்த படத்தின் பாடல்களையும் பெரிய அளவில் கொண்டாடி மகிழ்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன் என்கிறார் இசையமைப்பாளர் சி.சத்யா.